<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>துலா</title>
	<atom:link href="http://thulaa.net/home/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://thulaa.net/home</link>
	<description>t h u l a a . n e t</description>
	<lastBuildDate>Sat, 18 May 2013 07:17:18 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு NDMLP ஆதரவு!</title>
		<link>http://thulaa.net/home/archives/617</link>
		<comments>http://thulaa.net/home/archives/617#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 07:17:18 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=617</guid>
		<description><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கும் தொடர்ந்து விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் வயிறுகளில் அடித்து வரும் அரசாங்கம்  இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தியதன் மூலம் மக்களின் தலைகளில் ஓங்கி அடித்துள்ளது.
இவ் அநீதியான மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமானதாகும். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்னெடுத்து வரும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் எமது புதிய – ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி இணைந்து நிற்கிறது. எதிர்வரும் 21ம் திகதி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எமது கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து அவற்றில் பங்கும் கொள்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ...]]></description>
				<content:encoded><![CDATA[<p>அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கும் தொடர்ந்து விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் வயிறுகளில் அடித்து வரும் அரசாங்கம்  இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தியதன் மூலம் மக்களின் தலைகளில் ஓங்கி அடித்துள்ளது.</p>
<p>இவ் அநீதியான மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமானதாகும். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்னெடுத்து வரும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் எமது புதிய – ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி இணைந்து நிற்கிறது. எதிர்வரும் 21ம் திகதி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எமது கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து அவற்றில் பங்கும் கொள்கிறது.<br />
<span id="more-617"></span><br />
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் தன்னைத் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் சார்பான அரசாங்கம் என்றே கூறி வருகிறது. அதற்குச் சப்பைக் கட்டும் வகையில் சில தொழிற்சங்கத் தலைவர்களையும் தொழிற்சங்கப் பெயர்களையும் பயன்படுத்தி அவ்வப்போது வேடிக்கை தரும் ஆர்ப்பாட்டங்களை கூலி கொடுத்தும் நடாத்தி வருகிறது.</p>
<p>ஆனால் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தலைகள் மீது தொடர்ந்தும் விலை உயர்வு கட்டண அதிகரிப்புச் சுமைகளை ஏற்றி மக்களின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலைய வைத்து வருகிறது. அந்தவகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை இருட்டில் தள்ளி உள்ளது. இலங்கை மின்சார சபைக்கு குறுகிய காலக் கடனாக பதின்மூவாயிரத்து எழுநூறு கோடி ரூபா (137 பில்லியன் ரூபா) இருந்து வருகிறது. அதேவேளை நீண்டகாலக் கடனாக 2012ம் ஆண்டு முடிவில் இருபத்தியொன்பதினாயிரத்து அறுநூறு கோடி, ரூபா (296 பில்லியன் ரூபா) இருந்து வருகிறது. இவற்றுடன் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவையும் சேர்த்தே மக்களின் மீது தாங்க முடியாத கட்டண உயர்வை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.</p>
<p>மின்சார உற்பத்திக்கு அதிகளவிற்கு எண்ணெய் பயன்படுத்தப்படுவதும், நீர் மின்சார உற்பத்தி உட்பட ஏனைய வழிமுறைகள் கவனிக்கப்படாது விடப்படுவதுமே உற்பத்திச் செலவு அதிகம் எனக் கூறப்படுவதற்குரிய காரணமாகும். அத்துடன் மின்சார உற்பத்தி கம்பனிகளின் அதிக லாபத்திற்கான அழுத்தங்களும் கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்துகின்றன. மக்களதும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளதும் கடும் எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி தலையிட்டு பதினொரு லட்சம் வீட்டுப் பாவனையாளருக்கு சலுகைக் கட்டணக் குறைப்புச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது வழமையான ஏமாற்று நடவடிக்கைகளில் ஒன்றேயாகும். ஒன்றைக் குறைத்து மற்றதில் கூட்டிக் கொள்ளும் வழிமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. இவை வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளேயாகும்.</p>
<p>எனவே தற்போதைய மின் கட்டண உயர்வு கைவிடப்படுதல் வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மக்கள் சார்பு பொது அமைப்புகளின் கலந்தாலோசனைகளுடன் மின்சாரக் கட்டண உயர்வு மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதே நியாயமான வழிமுறையாகும். அதேவேளை பெரும் கம்பனிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வணக்கத்தலங்கள் போன்றவற்றுக்கான மின்சார சலுகைக் கட்டணங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். எல்லாவற்றையும் சேர்த்து தாங்கமுடியாத கட்டணத்தை மக்கள் மீது சுமத்துவதை உடன் நிறுத்த வேண்டு என்பதே எமது கட்சியின் கோரிக்கையாகும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>18.05.2013</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>பொதுச்செயலாளர்</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி</strong> </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/617/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உழைக்கும் மக்களே! ஒடுக்கப்படும் மக்களே! மேதினத்தில் அணி திரள்வீர்!</title>
		<link>http://thulaa.net/home/archives/613</link>
		<comments>http://thulaa.net/home/archives/613#comments</comments>
		<pubDate>Thu, 25 Apr 2013 19:17:54 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=613</guid>
		<description><![CDATA[புதிய-ஐனநாயக மக்சிச-லெனினிசக் கட்சியின் மேதின அறைகூவல்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப்பொருட்களுக்கும் தொடர்ந்து விலை அதிகரிப்புக்களைச் செய்து வரும் மகிந்த ராஐபக்ச அரசாங்கம் மின்சாரப் பாவனைக்கும் போக்குவரத்துக்கும் அளவுக்கு மீறிய கட்டணங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகிறது. இவற்றின் மூலம் நாட்டு மக்கள் அனைவரினதும் தலைகளில் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளை ஏற்றி வருவது மட்டுமன்றி, வயிறுகளிலும் ஒங்கி அடித்து வருகிறது. அதே வேளை நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை மறுத்து வடக்குக் கிழக்கில் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி வருகின்றது.

இந்நிலையில் உலகத் தொழிலாளர்களின் சர்வதேசத் தினமான மேதினத்தில் அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களும் அணி திரண்டு மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் கண்டனக் குரல் ...]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>புதிய-ஐனநாயக மக்சிச-லெனினிசக் கட்சியின் மேதின அறைகூவல்.</strong></p>
<p>அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப்பொருட்களுக்கும் தொடர்ந்து விலை அதிகரிப்புக்களைச் செய்து வரும் மகிந்த ராஐபக்ச அரசாங்கம் மின்சாரப் பாவனைக்கும் போக்குவரத்துக்கும் அளவுக்கு மீறிய கட்டணங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகிறது. இவற்றின் மூலம் நாட்டு மக்கள் அனைவரினதும் தலைகளில் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளை ஏற்றி வருவது மட்டுமன்றி, வயிறுகளிலும் ஒங்கி அடித்து வருகிறது. அதே வேளை நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை மறுத்து வடக்குக் கிழக்கில் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி வருகின்றது.<br />
<span id="more-613"></span><br />
இந்நிலையில் உலகத் தொழிலாளர்களின் சர்வதேசத் தினமான மேதினத்தில் அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களும் அணி திரண்டு மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் கண்டனக் குரல் கொடுத்து எதிர்ப்புத் தெரிவிக்க முன்வரல் வேண்டும்.</p>
<p>இவ்வாறு <strong>யாழ்ப்பாணம்,அட்டன்,வவுனியா ஆகிய நகரங்களில் புரட்சிகர மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடாத்துவதற்கு தயாராகிவரும் புதிய ஐனநாயக மாக்கிச லெனினிசக் கட்சியி</strong>ன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் ஆகியோர் கட்சியின் மத்தியகுழு சார்பாக வெளியிட்ட மேதின அறை கூவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் அவ் அறிக்கையில்,</p>
<p>இன்றைய மகிந்தராஐபக்ச சகோதரர்களின் குடும்ப ஆட்சியானது முன்னெடுத்துவரும் பொருளாதாரக் கொள்கையானது ஏகாதியத்திய உலகமயமாதலின் கீழான நவதாராள நுகர்வுப் பொருளாதாரமாகவே காணப்படுகிறது. உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பதிலான இந்த நுகர்வுப் பொருளாதாரமே நாட்டையும் மக்களையும் நாசப்படுத்தி வருகிறது.</p>
<p>நாட்டின் வளங்களையும் மக்களையும் சுரண்டிக் கொள்ளையிட்டு வரும்  பொருளாதாரத்திற்குச் சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும், ஆலோசனை வழிகாட்டல் செய்து நிற்கின்றன. அதன் காரணமாகவே அரசாங்க &#8211; தனியார்துறை ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு மறுக்கப்படுகிறது. மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அண்மையில் கூட்டு ஒப்பந்தம் என்ற ஏமாற்றின் மூலம் அற்ப சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட உழைக்கும் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் அடக்குமுறைகளையுமே இன்றைய ஐனாதிபதி தலமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதே வேளை நாடு எதிர் நோக்கி நிற்கும் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பேரினவாத வக்கிரத்துடன் மறுத்து நிற்கிறது.</p>
<p>அத்துடன் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் தேசிய இனங்கள் மீதான நேரடினதும் மறைமுகமானதுமான பேரினவாத ஒடுக்கு முறைகளையும் நடைமுறைப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் அப்பட்டமான பேரினவாத ராணுவ அடக்கு முறையைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. நிலப்பறிப்பு, நிலஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு எனக் கேள்வி நியாயம் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன. இந் நிலையில் அனைத்து உழைக்கும் மக்களும் அடக்கப்படும் தமிழ் மக்களும் அணிதிரண்டு வெகுஐனப் போராட்டப் பாதையில் அணிதிரள்வதை விட வேறு மார்க்கம் இருக்க முடியாது. எனவே உலகத் தொழிலாளர் தினமான மேதினத்தில் அணிதிரளுமாறு எமது கட்சி அறைகூவல் விடுக்கின்றது.</p>
<p>யாழ்ப்பாணத்தில் கட்சியின் மேதினக்கூட்டம் பி.ப.4.00மணிக்கு ஸ்ரான்லி வீதி பட்டப் படிப்புகள் கல்லூரி வளாகத்தில் வட பிராரந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும். பிரதான மேதின உரையினை பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றுவார். கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம் உட்பட கட்சி, தொழிற்சங்க வெகுஐன அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரை நிகழ்த்துவர்.</p>
<p>அட்டன் நகரில் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் தலைமையில் மேதினக் கூட்டம் நடைபெறும். கட்சி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள்  உரையாற்றுவார்.</p>
<p>வவுனியா நகரில் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் ந.பிரதீபன் தலைமையில் ஐந்து தொழிற் சங்க அமைப்புக்கள் இணைந்து மேதின கூட்டத்தையும் பேரணியையும் நாடாத்துகின்றனர். அங்கு கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா பிரதான உரையாற்றுவார். வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்துக்கு முன்பாகவிருந்து காலை 9.30மணிக்கு மேதினப் பேரணி ஆரம்பித்து பிரதான வீதிகள் ஊடாக வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்து அங்கு கூட்டம் இடம் பெறும். பி.ப.2.00மணிக்கு சுன்னாகத்திலிருந்து மேதினச் சைக்கிள் பேரணி ஆரம்பமாகி கங்சேசன்துறை வீதி வழியாக கூட்ட வளாகத்தைச் சென்றடையும்.</p>
<p><strong>தொடர்புகளுக்கு:</strong><br />
<strong>சி.கா.செந்திவேல் &#8211; பொதுச்செயலாளர் 0779774427</strong><br />
<strong>வெ.மகேந்திரன் &#8211; தேசிய அமைப்பாளர் 0716745642</strong></p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>25.04.2013</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>புதிய – ஐனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி</strong> </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/613/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் இ.கா.சூடாமணி இயற்கை எய்தினார்</title>
		<link>http://thulaa.net/home/archives/608</link>
		<comments>http://thulaa.net/home/archives/608#comments</comments>
		<pubDate>Sat, 30 Mar 2013 18:58:14 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=608</guid>
		<description><![CDATA[பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரும் மூத்த தோழரும் புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து போராட்டத் தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தலைவரும் புதிய பூமி &#8211; புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஐம்பத்தைந்து வருடகால அரசியல் பணியில் பல் வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவரும் முன்னுதாரணம் மிக்க கம்யூனிஸ்ட் போராளியுமான தோழர் இ.கா.சூடாமணி கடந்த 29-04-2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01-04-2013 அன்று புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம் பெற்று பூந்தோட்டம் பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.


&#8211;
மத்திய குழு
புதிய – ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சி 
077 9774427       
]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong><span style="color: #ff0000;">பொ</span></strong>துவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரும் மூத்த தோழரும் புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து போராட்டத் தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தலைவரும் புதிய பூமி &#8211; புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஐம்பத்தைந்து வருடகால அரசியல் பணியில் பல் வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவரும் முன்னுதாரணம் மிக்க கம்யூனிஸ்ட் போராளியுமான தோழர் இ.கா.சூடாமணி கடந்த 29-04-2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01-04-2013 அன்று புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம் பெற்று பூந்தோட்டம் பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.</p>
<p><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2013/03/yhu_0002_NEW.jpg"><img class="aligncenter" alt="yhu_0002_NEW" src="http://thulaa.net/home/wp-content/uploads/2013/03/yhu_0002_NEW-244x300.jpg" width="244" height="300" /></a><br />
<span id="more-608"></span><br />
<span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>மத்திய குழு</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>புதிய – ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சி </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>077 9774427       </strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/608/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>கூட்டு ஒப்பந்தத்தில் மொழி உரிமை மீறல். அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு.</title>
		<link>http://thulaa.net/home/archives/604</link>
		<comments>http://thulaa.net/home/archives/604#comments</comments>
		<pubDate>Fri, 22 Mar 2013 09:05:35 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=604</guid>
		<description><![CDATA[பெருந்தோட்ட மக்களின் தொழில் உரிமையுடன் தொடர்புடைய கூட்டு ஒப்பந்தங்களைத் தமிழ் சிங்கள மொழிகளில் வர்த்தமானியில் வெளியிடாமை தொடர்பாகவும் தோட்ட நிர்வாகம்  தோட்டங்களில் அவற்றைக் காட்சிப்படுத்தாமை தொடர்பாகவும் மக்கள் தொழிலாளர் சங்கம் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்குத் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தொழில் உறவுகள் உத்தியோகத்தர் ஆர். லோரன்ஸ் அவர்களின் கையொப்பத்தில் அனுப்பப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் 1998ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டுவரை செய்யப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தங்கள் தமிழ் மொழியில் தொழில் ஆணையாளரினால் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. 2006ம் ஆண்டு 14ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2009ம் ஆண்டு 14ம் இலக்க கூட்டு ஒப்பந்தம் ஆகியன மட்டும் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழியிகளில் அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்துள்ளன. மற்றைய கூட்டு ஒப்பந்தங்கள் (2011ம் ஆண்டு 22ம் ...]]></description>
				<content:encoded><![CDATA[<p>பெருந்தோட்ட மக்களின் தொழில் உரிமையுடன் தொடர்புடைய கூட்டு ஒப்பந்தங்களைத் தமிழ் சிங்கள மொழிகளில் வர்த்தமானியில் வெளியிடாமை தொடர்பாகவும் தோட்ட நிர்வாகம்  தோட்டங்களில் அவற்றைக் காட்சிப்படுத்தாமை தொடர்பாகவும் மக்கள் தொழிலாளர் சங்கம் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்குத் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.</p>
<p>மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தொழில் உறவுகள் உத்தியோகத்தர் ஆர். லோரன்ஸ் அவர்களின் கையொப்பத்தில் அனுப்பப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:</p>
<p><span id="more-604"></span><br />
தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் 1998ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டுவரை செய்யப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தங்கள் தமிழ் மொழியில் தொழில் ஆணையாளரினால் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. 2006ம் ஆண்டு 14ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2009ம் ஆண்டு 14ம் இலக்க கூட்டு ஒப்பந்தம் ஆகியன மட்டும் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழியிகளில் அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்துள்ளன. மற்றைய கூட்டு ஒப்பந்தங்கள் (2011ம் ஆண்டு 22ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2007ம் ஆண்டு 37ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2004ம் ஆண்டு 42ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2003ம் ஆண்டு 13ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2002ம் ஆண்டு 13ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 2001ம் ஆண்டு 18ம் இலக்க பிற்சேர்க்கை கூட்டு ஒப்பந்தம், 2000ம் ஆண்டு 09ம் இலக்க கூட்டு ஒப்பந்தம், 1998ம் ஆண்டு 50ம் இலக்க கூட்டு ஒப்பந்தம்) அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே வெளிவந்துள்ளன.</p>
<p>இது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 12(1),(2) ,(3) ஆகிய உறுப்புரிமைகளை மீறும் செயல் என்பதோடு மொழி அத்தியாயத்தின் அரசகரும மொழிகள் பற்றிய 18(1),(2) உறுப்புரையையும் மீறுவதாகும்.</p>
<p>அத்தோடு 1957ம் ஆண்டு 62ம் இலக்க தொழில் பிணக்கு சட்டத்தின் 10ஆ பிரிவுக்கு அமைய கூட்டு ஒப்பந்தத்தை தொழில் வழங்குனர்கள் தொழிலாளர்களால் இலகுவாகப் பார்க்கக்கூடிய வகையில் அறிவித்தல் பலகையில் தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் பெருந்தோட்டக் கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களிலும் தேசிய தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) , இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) ஆகிய அரச நிறுவனங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் தோட்டங்களிலும் இந்நடைமுறை மேற்கொள்ளப்படுவதில்லை.</p>
<p>இந்த மொழி உரிமை மீறல்கள் தொடர்பில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் அது தொடர்பில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தனது சட்ட ஆணைக்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதபதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் தற்போது நடைமுறையில் உள்ள 2003ம் ஆண்டு 13ம் இலக்க அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெகு விரைவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் எதிர்காலங்களில் கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலுல் ஏககாலத்தில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதனை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச சபைகளுக்கு உட்பட்ட அனைத்து தோட்டங்களிலும் 1957ம் ஆண்டு 62ம்இலக்க தொழில் பிணக்கு சட்டத்தின் 10ஆ பிரிவுக்கு அமைய கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் உரிய முறையில் காட்சிப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துமாறும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/604/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>NDMLP Salutes Hugo Chavez and his Stand and Struggles against US Imperialism</title>
		<link>http://thulaa.net/home/archives/599</link>
		<comments>http://thulaa.net/home/archives/599#comments</comments>
		<pubDate>Tue, 12 Mar 2013 06:14:48 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[English]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=599</guid>
		<description><![CDATA[Yesterday, Venezuela’s President Hugo Chavez succumbed to the cancer that harassed him for two years. The New-Democratic Marxist-Leninist Party of Sri Lanka sorrowfully mourns his death, and remembers his historic contribution to anti-imperialism in Latin America and the Caribbean, which can be second only to that of Fidel Castro.  The Bolivarian Revolution initiated by him changed for better the life of the poor majority in Venezuela and the Bolivarian spirit of anti-imperialist cooperation and defence of the resources of countries against imperialist plunder, inspired several South American countries.

Following his election ...]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong><span style="color: #ff0000;">Y</span></strong>esterday, Venezuela’s President Hugo Chavez succumbed to the cancer that harassed him for two years. The New-Democratic Marxist-Leninist Party of Sri Lanka sorrowfully mourns his death, and remembers his historic contribution to anti-imperialism in Latin America and the Caribbean, which can be second only to that of Fidel Castro.  The Bolivarian Revolution initiated by him changed for better the life of the poor majority in Venezuela and the Bolivarian spirit of anti-imperialist cooperation and defence of the resources of countries against imperialist plunder, inspired several South American countries.</p>
<p><span id="more-599"></span><br />
Following his election as President in 1999, he used his position to make fundamental changes to Venezuela’s political structure, including a new constitution assuring the rights of marginalized groups, a highly democratic system of public referenda with mass participation on major public issues, and participatory democratic councils. He pursued in word and deed his vision of Socialism in the 21st Century and, in the process, with popular support overcame military coups, strikes and recall referendums instigated by the US-backed right. By nationalising several key industries, especially oil, he enhanced the government’s financial resources, much of which he invested in the previously neglected health care and education, and thereby achieved a significant reduction in poverty.</p>
<p>Most importantly, Chavez symbolised Latin American resistance to US imperialism, and was a focal point for Latin American solidarity against US domination. He considerably succeeded in bringing together Venezuela, Bolivia, Cuba, Argentina, Brazil, Ecuador and other countries of the region to isolate the US on long-standing Latin American issues such as the US policy towards Cuba and the more recent coup in the Honduras. Also, his principled stand in defending people and countries outside the region, especially Palestine, Lebanon, Iran, Libya and Syria, against the cynical and systematic subversion by US imperialism and its allies was a source of strength for anti-imperialist struggles. Thus his loss will be deeply felt far beyond Venezuela, and Latin America and the Caribbean and, to the vast section of humanity struggling for its rights, the name of Chavez will forever be associated with hope and resistance.</p>
<p>The New-Democratic Marxist-Leninist Party of Sri Lanka is at one with vast majority of toiling masses of Venezuela in sharing their deep sorrow for their beloved leader and their avowed determination to struggling to achieve the goals of Chavez defined in his vision of a Bolivarian revolution.</p>
<p>May the spirit of social justice and struggle symbolised by Chavez advance ever stronger wherever mankind seeks liberation!</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>7th March 2013</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>SK Senthivel</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>General Secretary</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>New-Democratic Marxist-Leninist Party</strong> </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/599/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கூட்டு ஒப்பந்தத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் மாற வேண்டும்</title>
		<link>http://thulaa.net/home/archives/594</link>
		<comments>http://thulaa.net/home/archives/594#comments</comments>
		<pubDate>Tue, 26 Feb 2013 05:46:46 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=594</guid>
		<description><![CDATA[இவ்வருடம் மார்ச் 31ம் திகதியுடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக 2011ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பளக் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிறது.
தொடர்ச்சியான வாழ்கைச் செலவு அதிகரிப்பினால் துன்புறும் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பைத் தொழிலாளர்கள் சார்பாகக் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இ.தொ.கா, இ.தே.தோ.ச மற்றும் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகியன நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நியாயமான சந்தேகம் ஒருபுறம் இருக்க, வழமையாகக் கூட்டு ஒப்பந்தக் காலத்தில் சம்பள உயர்வை வழங்கும் நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் இல்லை என்று கூறி வந்த இலங்கை முதலாளிமார் சம்மேளனம் இம்முறை சட்ட ரீதியாகப் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை தோன்றி இருப்பதாகக் கூறிவருகிறது. தோட்டப் பொதுச் சேவையாளர் சங்கத்துக்கும் முதலாளிமார் ...]]></description>
				<content:encoded><![CDATA[<p>இவ்வருடம் மார்ச் 31ம் திகதியுடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக 2011ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பளக் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிறது.</p>
<p>தொடர்ச்சியான வாழ்கைச் செலவு அதிகரிப்பினால் துன்புறும் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பைத் தொழிலாளர்கள் சார்பாகக் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இ.தொ.கா, இ.தே.தோ.ச மற்றும் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகியன நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்து வருகின்றனர்.</p>
<p>இந்த நியாயமான சந்தேகம் ஒருபுறம் இருக்க, வழமையாகக் கூட்டு ஒப்பந்தக் காலத்தில் சம்பள உயர்வை வழங்கும் நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் இல்லை என்று கூறி வந்த இலங்கை முதலாளிமார் சம்மேளனம் இம்முறை சட்ட ரீதியாகப் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை தோன்றி இருப்பதாகக் கூறிவருகிறது. தோட்டப் பொதுச் சேவையாளர் சங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பாக நடுத்தீர்ப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளையும் இதர சட்ட நடவடிக்கைளையும் காட்டித் தொழிலாளர்களுடனான கூட்டு ஒப்பந்தத்தைச் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதாகக் கூறுகின்றனர்.</p>
<p><span id="more-594"></span></p>
<p>தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பாகச் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தமும் தோட்டப் பொதுச் சேவையாளர் சங்கத்துடன் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தமும் தனித்தனியானவையாக ஒன்றில் ஒன்று எவ்விதத்திலும் தங்கி இருக்காத நிலையில் இவ்வாறான சட்ட அடிப்படையற்ற கருத்தை இலங்கை முதலாளிமார் சம்மேளனம் கூறி இருப்பதன் உள் நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.</p>
<p>மூன்று இலட்சம் வரையான தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகத் தீர்மானிக்கப்படவுள்ள சம்பளக் கூட்டு ஒப்பந்தம் முழு மலையக மக்களின் வாழ்கையிலும் தாக்கத்தைப் பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தக் கூடியதாகும். 2003ம் ஆண்டு 13ம் இலக்க (முதன்மை) கூட்டு ஒப்பந்தமும் அதன் ஆறாவது உறுப்புரைக்கு அமைய செய்யப்பட்ட 2011ம் ஆண்டு 22ம் இலக்கச் சம்பளக் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளும் உள்ளடக்கத்திலும் நடைமுறை பிரயோகத்திலும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவதாகவே இருந்துள்ளன.</p>
<p>கடந்த சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக ரூ 500 எதிர்பார்த்துத் தொழிற்சங்க பேதங்களைக் கடந்து மக்கள் போராடிய போதும் வெறும் ரூ 380 அடிப்படைச் சம்பளத்திற்கு இணங்கித் தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்ததைத் தோட்டத் தொழிலாளர்கள் மறக்க நியாயம் இல்லை. அத்தோடு அந்த ஒப்பந்தத்தில் உயர்த்தப்பட்ட அடிப்படைச் சம்பளத்திற்கு ஏற்ப தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய இரண்டு மாதகால (01.04.2011 -31.05.2011 வரை) ஊ.சே.நி, ஊ.ந.நி ஆகியன முதலாளிமார் சம்மேளனத்துக்குத் தாரைவர்க்கப்பட்டன. ஒப்பந்தத்தில் காணப்படும் நெகிழ்வுத்தன்மைகளைத் தமது நலனுக்குத் தோட்ட நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. வேலை நேரம், நாட் சம்பளத்துக்கான இலக்கு (கொழுந்து கிலோ, இறப்பர்ப் பால் அளவு இன்னபிற) ஆகியவற்றைத் தோட்ட நிர்வாகம் தான்தோன்றித்தனமாகத் தீர்மானித்துத் தொழிலாளர்களின் உழைப்பை மேலும் மேலும் சுரண்டி வருகின்றனர்.</p>
<p>அதேபோல் சில தோட்டங்களில் ஞாயிறு, பௌர்ணமி வேலை செய்யும் போது (1 ½  நாள் அடிப்படைச் சம்பளமான ரூ380 மற்றும் இலக்குப் பூர்த்திக்கான ரூ30ஐ சேர்த்து) ரூபா 615 வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறி அந்நாட்களுக்குக் கைகாசுக்கு வேலை வழங்குவதும் அந்நாட்களுக்கு 1 ½ சம்பளம் வழங்குவதாயின் சாதாரண வேலை அளவை விட மேலதிக இலக்குகளை வழங்குவது போன்ற கூட்டு ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டு வருகின்றனர். தோட்ட நிர்வாகத்தினால் மரபு ரீதியாக வழங்கப்பட்டு வந்த பல நலன்புரித் திட்டங்கள் நீக்கப்பட்டு வருகின்ற நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் இவற்றுக்கு எதிராக மக்களின் பக்கம் நின்று எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதைத் துணிந்து கூறலாம்.</p>
<p><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/pwu_banner.jpg"><img class="size-medium wp-image-574 aligncenter" alt="pwu_banner" src="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/pwu_banner-300x126.jpg" width="300" height="126" /></a><br />
இப்பின்னணியில் தனித்துச் சம்பள உயர்வுக்கான சம்பளக் கூட்டு ஒப்பந்தம் என்ற நிலையைக் கடந்து 2003ம் ஆண்டு 13ம் இலக்க அடிப்படைக் கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதும் புதிய விடயங்களைச் சேர்த்துக் கொண்டு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க முடியாத நிலையை ஏற்படுத்துவதும் அவசியமானதாகும். பெருந்தோட்டக் காணிகளைச் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கு வழங்கித் தோட்டத் தொழிலாளர்களைத் தொழில் உரிமைகள் அற்ற கொத்தடிமை நிலைக்குக் கொண்டு செல்லும் பாதையில் இன்றைய அரசாங்கத்தின் கொள்கை காணப்படுகிறது. 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளால் பயன்படுத்தப்படாத 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தைச் சிறு உடைமையாளர்களுக்கு வழங்க ஏற்பாடாகியுள்ளது. ஒரு சிறு துண்டுக் காணிகூட இன்றி உழைத்து வரும் மலையக மக்கள் உழைத்துச் செழுமைப்படுத்திய நிலங்களை மலையக மக்களுக்கு வழங்காது ஓர வஞ்சனை காட்டப்படுவதற்கும் மலையக மக்களின் வாழ்வாதாரமான பெருந்தோட்டங்களைப் பாதுகாக்கவும் தோட்டத் தொழிலாளர்கள் இன்று தயாராக வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.</p>
<p>இந்நிலையில் இந்தக் கூட்டு ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பாக அறிந்து கொள்வதும் வரப்போகும் கூட்டு ஒப்பந்தத்தில், நிபந்தனைகளில் தங்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டியவர்களாகத் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு தமது உரிமைக்காகப் பங்குபற்றுவதனை உறுதி செய்ய மலையக மக்களுக்கு அநீதிகளுக்கு எதிரான சக்திகள் &#8211; புத்திஜீவிகள், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஊடகவியாலாளர்கள் &#8211; தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டிய தேவை உள்ளது. அத்தோடு தேசிய மட்டத்தில் மலையக மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தொழில் மற்றும் சம்பள உரிமைக்குக் குரல் கொடுக்கும் போது அவர்களை மக்கள் அரவணைத்துச் செல்லவும் தயங்கக் கூடாது. அப்போதே இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச வெற்றியையேனும் பெற முடியும்.</p>
<p>மொத்தத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தமது உரிமைக்கான போரட்டத்தைத் தலைவர்கள் வழிநடத்துவது என்ற நிலை மாறித் தலைவர்களைத் தொழிலாளர்கள் வழிநடத்தும் நிலை வரும் போதே தொழிலாளர்களுக்கான வெற்றி உறுதி செய்யப்படும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211; </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>பா. சுகுமாரன் </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>பொதுச் செயலாளர் </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>மக்கள் தொழிலாளர் சங்கம் </strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>19.02.2013</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/594/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>NDMLP Statement to the Media on the Channel-4 photographs</title>
		<link>http://thulaa.net/home/archives/588</link>
		<comments>http://thulaa.net/home/archives/588#comments</comments>
		<pubDate>Sun, 24 Feb 2013 11:50:27 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=588</guid>
		<description><![CDATA[Comrade SK Senthivel, General Secretary of the New-Democratic Marxist-Leninist Party issued on behalf of the Politburo of the Party the following statement to the media on the recent release by the British TV channel, Channel-4 of photographs relating to the killing of Prabakaran’s son Balachandran.

No lies or distortions can cover up the wicked deeds of the military action carried out by the defence forces of Sri Lanka in the name of “humanitarian war” during the final stages of the war in 2009.  Information and evidence about them have already been ...]]></description>
				<content:encoded><![CDATA[<p>Comrade SK Senthivel, General Secretary of the New-Democratic Marxist-Leninist Party issued on behalf of the Politburo of the Party the following statement to the media on the recent release by the British TV channel, Channel-4 of photographs relating to the killing of Prabakaran’s son Balachandran.</p>
<p><span id="more-588"></span></p>
<p>No lies or distortions can cover up the wicked deeds of the military action carried out by the defence forces of Sri Lanka in the name of “humanitarian war” during the final stages of the war in 2009.  Information and evidence about them have already been released by international democratic and human rights organisations.</p>
<p>As a continuation of such information, the TV channel, Channel-4 had recently release photographs relating to the killing of the 12-years old son of Prabakaran. The killing of a child of tender age as an act of revenge has shocked every parent who saw the photographs. Although the photographs have been released belatedly, they have brought out the cruelties of the war and the violation of the rules of combat. The New-Democratic Marxist-Leninist Party strongly condemns these acts.</p>
<p>Many thousands of Tamils were killed in the coastal areas of Mullaitheevu in the final days of the cruel war carried forward by the Mahinda Chinthana government. Those killed included the old, the sickly, women, children, youth and infants. Prabakaran’s twelve year old son Balachandran was killed as one such victim. This wicked act was an inhumane and immoral act of murder carried out as an act of perverted vengeance. It is in breach of national laws and to accepted international norms for the conduct of war.</p>
<p>This event makes us wonder how many more tender buds like Balachandran would have fallen prey during the final stages of the war to the guns of this regime, which has vociferously claimed at home and abroad that it was acting against the recruitment of children as soldiers and to protect the rights of children.Thus the government should solely accept responsibility and answer charges relating to this.</p>
<p>But spokespersons for the government and the Defence Secretary are simply denying everything. It will be in vain to expect that the UN, its Human Rights Council, the US, the West and India will provide justice for the human rights breaches of the final stages of the war or for the murder of the child, Balachandran.</p>
<p>It was these countries that were responsible for the murder of children of tender age like Balachandran. Hence, the only way to win justice for these murders is to make the Sinhalese people, who have been distracted by the government, to think politically and question the government. It is our duty to inform the Sinhalese people that the same fate could befall the Sinhalese youth tomorrow.</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>23rd February 2013</strong></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/588/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>Channel-4 ஒளிப்படங்கள் பற்றிய NDMLP யின் அறிக்கை</title>
		<link>http://thulaa.net/home/archives/583</link>
		<comments>http://thulaa.net/home/archives/583#comments</comments>
		<pubDate>Sun, 24 Feb 2013 11:42:30 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=583</guid>
		<description><![CDATA[2009ம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனிதாபிமான யுத்தம் என்னும் பெயரில் முன்னெடுத்த கொடூர ராணுவ நடவடிக்கைகளின் படுபாதகச் செயல்களை எத்தகைய பொய்கள் புனைவுகளாலும் மூடிக் கட்ட முடியாது. அவை பற்றிய தகவல்கள் ஆதாரங்கள் ஏற்கனவே சர்வதேச ஜனநாயக – மனித உரிமை அமைப்புகளால் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது.

ஒரு பச்சிளம் பாலகன் பழிவாங்கும் நோக்குடன் கொல்லப்பட்டிருப்பதானது ஒவ்வொரு தாய் தந்தையரையும் அனைத்து மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இப் படங்கள் காலம் கடந்து வெளிவந்திருப்பினும் அதன் ஊடாக யுத்தத்தின் கொடூரங்களும் யுத்த விதிகளின் மீறல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த யுத்தக்குற்றத்தினை எமது புதிய ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
மகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த ...]]></description>
				<content:encoded><![CDATA[<p>2009ம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனிதாபிமான யுத்தம் என்னும் பெயரில் முன்னெடுத்த கொடூர ராணுவ நடவடிக்கைகளின் படுபாதகச் செயல்களை எத்தகைய பொய்கள் புனைவுகளாலும் மூடிக் கட்ட முடியாது. அவை பற்றிய தகவல்கள் ஆதாரங்கள் ஏற்கனவே சர்வதேச ஜனநாயக – மனித உரிமை அமைப்புகளால் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது.<br />
<span id="more-583"></span><br />
ஒரு பச்சிளம் பாலகன் பழிவாங்கும் நோக்குடன் கொல்லப்பட்டிருப்பதானது ஒவ்வொரு தாய் தந்தையரையும் அனைத்து மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இப் படங்கள் காலம் கடந்து வெளிவந்திருப்பினும் அதன் ஊடாக யுத்தத்தின் கொடூரங்களும் யுத்த விதிகளின் மீறல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த யுத்தக்குற்றத்தினை எமது புதிய ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.</p>
<p>மகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த இறுதி நாட்களிலான கொடூர யுத்தத்தில் முல்லைத்தீவின் கடலோரப் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். அவர்களில் வயோதிபர்களும் நோயாளிகளும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர் யுவதிகளும் பச்சிளம் பாலகர்களும் உள்ளடங்கி இருந்தனர். அத்தகைய பாலகர்களில் ஒருவராகவே பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். இப்படுபாதகச் செயல் மனித நேயத்திற்கும் மனித தர்மத்திற்கும் அப்பாலான பழிவாங்கும் வக்கிரத்தோடு செய்யப்பட்டிருக்கும் படுகொலையாகும். இது உள்நாட்டு யுத்தச் சட்டவிதிகளுக்கோ அல்லது எற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளுக்கோ உட்பட்டதல்ல.</p>
<p>மேலும் சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைப் பற்றியும் சிறுவர் உரிமைகளுக்காகச் செயல்படுவதாக உள்நாடு முதல் உலக நாடுகள் வரை உரத்துக் கூறி வந்தவர்களான இவ் ஆட்சியினர் இறுதி யுத்தத்தில் பன்னிரண்டு வயதுப் பாலச்சந்திரன் போன்று எத்தனை இளம் தளிர்களைத் தமது துப்பாக்கி ரவைகளுக்கு இரையாக்கி இருப்பாகள் என்றே சிந்திக்க வைக்கிறது.</p>
<p style="text-align: left;">எனவே அரசாங்கமே இதற்கான பொறுப்பையும் பதிலையும் கூறவேண்டும். ஆனால் அரசாங்கத்தின் பேச்சாளர்களும் பாதுகாப்புச் செயலாளரும் மறுப்பு நியாயங்களே கூறி வருகின்றனர். அதே வேளை ஜ.நா.வும் மனித உரிமைகள் பேரவையும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இறுதி யுத்த கால மனித உரிமை மீறல்களுக்கோ அல்லது பாலகன் பாலச்சந்திரனின் படுகொலைக்கோ நீதியும் நியாயமும் தேடித் தருவார்கள் என நம்புவது அர்த்தமற்றவொரு எதிர்பார்ப்பாகவே இருக்க முடியும். ஏனெனில் இறுதி யுத்தத்தின் பேரழிவுகளுக்கும் பலச்சந்திரன் போன்ற இளம் தளிர்களின் கொலைகளுக்கும் இதே நாடுகளும் பொறுப்புதாரிகளேயவர்.</p>
<p style="text-align: left;">
<a href="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/18583760.cms_.jpeg"><img class="aligncenter size-medium wp-image-584" alt="18583760.cms" src="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/18583760.cms_-300x269.jpeg" width="300" height="269" /></a><br />
எனவே இக் கொலைகளுக்கு நியாயம் பெற வேண்டுமாயின் ஒரே மாற்று வழி அரசாங்கத்தால் திசை திருப்பிவைக்கப்பட்டுள்ள சிங்கள மக்களை அரசியல் ரீதியிற் சிந்திக்க வைத்து. அவர்களை அரசாங்கத்திடம் கேள்வி கேட்டு நிற்க வைப்பதேயாகும். நாளை சிங்கள மக்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் பச்சிளம் பாலகர்களுக்கும் இதே கதி ஏற்படவே செய்யும் என்பதைச் சிங்கள உழைக்கும் மக்களுக்கு எடுத்துரைப்பது நமது கடமையாகும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>ஊடகங்களுக்கான அறிக்கை</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>23.02.2013                                          </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>பொதுச் செயலாளர்</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>புதிய ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/583/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மக்கள் தொழிலாளர் சங்கத்தின் புரட்சிகர அழைப்பு!</title>
		<link>http://thulaa.net/home/archives/573</link>
		<comments>http://thulaa.net/home/archives/573#comments</comments>
		<pubDate>Tue, 19 Feb 2013 19:17:34 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=573</guid>
		<description><![CDATA[அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 
இது மக்கள் தொழிலாளர் சங்கம் உங்களைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம். மக்களுக்கான தொழிற்சங்கம் என்ற ரீதியில் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
&#160;

&#160;
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அன்று முதல் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை அவர்கள் எடுத்ததில்லை. கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிக்காரர்கள் கூறும் அதே பொய்களை கூறிக் கொண்டு மக்களை தொழிற்சங்கங்கள் ஏய்த்தும் வருகின்றனர். அத்தோடு தொழிற்சங்க சட்டங்களினால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க உருப்படியான எந்த முயற்சிகளையும் அவர்கள் எடுப்பதில்லை. மக்களுக்கான தொழிற் சங்கம் என்ற வகையில் தோட்டத் தொழிலாளர்கள் கீழ் வரும் கேள்விகளுக்கான விடைகளை அறிந்து கொள்ளுவதும் அது பற்றி கலந்துரையாடுவதும் அவசியம் என நாம் கருதுகின்றோம்.


தொழிற்சங்கம் ...]]></description>
				<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;"><strong>அன்பார்ந்த உழைக்கும் மக்களே!</strong> </span></p>
<p>இது மக்கள் தொழிலாளர் சங்கம் உங்களைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம். மக்களுக்கான தொழிற்சங்கம் என்ற ரீதியில் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.</p>
<p>&nbsp;</p>
<p style="text-align: center;"><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/pwu_banner.jpg"><img class="size-medium wp-image-574 aligncenter" alt="pwu_banner" src="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/pwu_banner-300x126.jpg" width="300" height="126" /></a></p>
<p>&nbsp;</p>
<p>மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அன்று முதல் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை அவர்கள் எடுத்ததில்லை. கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிக்காரர்கள் கூறும் அதே பொய்களை கூறிக் கொண்டு மக்களை தொழிற்சங்கங்கள் ஏய்த்தும் வருகின்றனர். அத்தோடு தொழிற்சங்க சட்டங்களினால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க உருப்படியான எந்த முயற்சிகளையும் அவர்கள் எடுப்பதில்லை. மக்களுக்கான தொழிற் சங்கம் என்ற வகையில் தோட்டத் தொழிலாளர்கள் கீழ் வரும் கேள்விகளுக்கான விடைகளை அறிந்து கொள்ளுவதும் அது பற்றி கலந்துரையாடுவதும் அவசியம் என நாம் கருதுகின்றோம்.</p>
<p><span id="more-573"></span></p>
<h2></h2>
<h2><span style="color: #000080;">தொழிற்சங்கம் என்றால் என்ன?</span></h2>
<p>&nbsp;</p>
<p>ஒரு குறித்த தொழிற் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் (தொழில் பெறுநர்கள்) அல்லது முதலாளிகள் (தொழில் வழங்குநர்கள்) தங்களின் தொழில் நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காக தமது உறுப்பினர்களை உள்ளடக்கி கூட்டாக செயற்படும் அமைப்பை தொழிற்சங்கம் என்று சுருக்கமாக கூறலாம். இலங்கையில் முதன்முதலில் பதிவு செய்யப்பட தொழிற்சங்கம் இலங்கை முதலாளிமார் சம்மேளனமாகும். இது இலங்கையின் முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சங்கமாகும். இதுவே தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கம்பனிகள் சார்பாக பேரம் பேசுகிறது. அதேபோல் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.</p>
<p>&nbsp;</p>
<h2><span style="color: #000080;">தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் என்றால் என்ன?</span></h2>
<p>&nbsp;</p>
<p>தொழிலாளர்களின் நலன்களை அடைந்து கொள்வதற்காக தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு ஒழுங்கமைப்பு. அதாவது தொழிலாளர்களை அணித்திரட்டி அவர்களை அரசியல்மயப்படுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடும் அமைப்பு என்று கூறலாம். இவ்வாறான தொழிற் சங்கங்களை மக்கள் சார்பு தொழிற் சங்கங்கள் எனலாம்.  இவற்றுக் மாறான தொழிற்சங்கங்கள் மக்கள் விரோத தொழிற்சங்கங்களாகும்.</p>
<p>&nbsp;</p>
<h2><span style="color: #000080;">தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் என்ன செய்ய வேண்டும்?</span></h2>
<p>&nbsp;</p>
<p>தோட்டத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஐக்கியப்படுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வல்லமையை தொழிலாளர்களிடம் உணர்வு ரீதியாக ஏற்படுத்துவதனையே தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
<p>இதற்கு தொழிற்சங்கமானது பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்றோம்.</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #000080;"><strong>1. உறுப்பினர்களான தொழிலாளர்களுக்கு தொழிற் சங்கங்கள் அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>2. தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக அரசியல், தொழிற்சங்கச் சட்டங்கள் பற்றிய அறிவை வழங்க வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>3. தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முன்னின்று உழைக்க வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>4. தொழிலாளர்கள் பெற வேண்டிய உரிமைகளுக்காகப் போராட வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>5. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் வாழ்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்திற்காக மக்களை அணித்திரட்டிப் போராட வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>6. தொழிலாளர்களிடம் இருந்து தலைவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களைத் தலைவர்களாக ஆக்க வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>7. தொழிலாளர்கள் அன்றாடம் தொழில் இடத்தில் முகம் கொடுக்கும் பிரச்சினைளைத் தீர்க்கத் தலையிட வேண்டும். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>8. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக வேலை நிறுத்த பேராட்டங்களையும் ஏனைய போராட்டங்களையும் முன்னெடுக்கும் போது, அதற்குத் தேவையான சட்டரீதியான உதவிகளையும் பாதுகாப்புக்களையும் வழங்குதல். </strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>9. இன்றைய அரசியல், பொருளாதார, சமூக, கலாசார காரணிகளால் தொழிலாளர்களிடையே தோன்றியுள்ள பண்பாட்டுச் சீரழிவுகளை நீக்கி,  மாற்று மக்கள் பண்பாட்டை ஏற்படுத்தச் செயற்படல்.</strong></span></p>
<p><span style="color: #000080;"><strong>10. மிக முக்கியமாக அனைத்துவித பேதங்களையும் கடந்து உறுப்பினர்கள் மத்தியில் தொழிலாளர்கள் என்ற ஐக்கிய உணர்வை ஏற்படுத்த வேண்டும்.</strong> </span></p>
<p>மேற்கூறிய விடயங்கள் இன்று தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குள் கேட்க வேண்டிய கேள்வியாக நாம் கருதுகின்றோம்.</p>
<p>&nbsp;</p>
<h2><span style="color: #000080;">மக்கள் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்கள் தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு என்ன?</span></h2>
<p>&nbsp;</p>
<p>தொழிலாளர்களே சமூகத்தின் இயக்க சக்தி என்று நாம் கருதுகின்றோம். உழைப்பு இன்றி இந்த உலகம் இயங்குவதில்லை. எனவே அந்த உழைப்பை வழங்கும் தொழிலாளர்களே உலகை இயக்குகின்றனர் என்ற உண்மையினை எமது அனைத்து செயற்பாடுகளுக்கும் அடி ஆதாரமாக கொண்டுள்ளோம்.</p>
<p>இலங்கையில் உழைக்கும் மக்களின் ஒரு பகுதி என்ற வகையில் இலங்கையின் பொருளாதாரத்தில் தோட்டத் தொழிலாளார்கள் இன்றும் மிகவும் முக்கியத்துவமிக்கவர்கள். எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதிகளும் கொடுமைகளும் ஓரவஞ்சனைகளுமே பரிசுகளாக கிடைத்தன.</p>
<p>தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அறிவைப் பெற்று தங்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக ஒன்றாக போராடும் நிலை ஏற்படும் போதே புதிய வாழ்வு கிடைக்கும். அந்த புதிய வாழ்வை அடைய, தொழிலாளர்களினால் வழிநடத்தப்படும் மக்கள் சார்பான நேர்மையான தொழிற்சங்கம் ஒன்று இன்றைய கட்டாய தேவையாகும்.</p>
<p>&nbsp;</p>
<h2><span style="color: #000080;">எமது வேலைத்திட்டம் என்ன?</span></h2>
<p>&nbsp;</p>
<p>தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் என்ற அடிப்படையில் சட்டரீதியாக உறுதிப்படுத்தியுள்ள அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க செயற்படுவதும், தொழிலாளர்களுக்கு அரசியல் அறிவை வழங்கி வென்றெடுக்கப்பட வேண்டிய உரிமைகளுக்காக அணிதிரட்டுவதே எமது பணியாகும். இந்தப் பணிக்கு,  மேலே நாங்கள் சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கம் ஆற்ற வேண்டிய பத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளோம்.</p>
<p>எனவே இம்முறை உழைக்கும் மக்களுக்கான தொழிற்சங்கமாக உள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.</p>
<p>நன்றி<br />
(பெப்ரவரி 2013)</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>மக்கள் தொழிலாளர் சங்கம்</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>இல. 52/3, ஆலயவீதி, கஹவத்த. </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>மின்னஞ்சல் : pwusrilanka@gmail.com</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/573/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முன்னிலை சோசலிசக் கட்சியின் வேலைத்திட்டம் பற்றிய ஒரு கண்ணோட்டம்</title>
		<link>http://thulaa.net/home/archives/566</link>
		<comments>http://thulaa.net/home/archives/566#comments</comments>
		<pubDate>Sat, 09 Feb 2013 21:39:03 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=566</guid>
		<description><![CDATA[நீண்ட காலத்தின் பின்பு, இலங்கை வரலாற்றில் சோஷலிசம் என்ற சொல்லைப் பேரிற் கொண்ட ஒரு கட்சி உருவானமை பிற்போக்குவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளதையும் நாம் அறிவோம். எனவே தான், மு.சோ.க., தனது பேருக்குத் தகுதியான ஒரு கட்சியாக அமைய வேண்டின் அது சகல விதமான குறுகிய இனவாத நோக்கங்களிலும் இருந்து விடுபட்ட ஒரு கட்சியாகத் தன்னை உருவாக்க வேண்டியுள்ளது. இத் தேவையைக் கருதியே அக் கட்சியின் வேலைத்திட்டம் இங்கு விமர்சிக்கபடுகின்றது.
&#160;


1. முன்னுரை
ஜே.வி.பியிலிருந்து பிரிந்து முன்னிலை சோஷலிசக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கியவர்கள் தமது கட்சி வேலைத் திட்டத் தை 44 பக்கங்கள் கொண்ட நீண்ட ஆவணமாக முன்வைத்துள்ளனர்.
இந்த ஆவணத்தைப் பற்றி தமிழ்த் தேசியவாதிகள் மத்தியிலும் இடதுசாரிகள் மத்தியிலும் கணிசமான எதிர்பார்ப்புகள் இருக்க நியாயமுண்டு. அந்த எதிர்பார்ப்புகள் சிலவோ பலவோ நிறைவேறாமல் இருக்க அதிலும் அதிகளவு நியாயமுண்டு. ஏனெனில் ...]]></description>
				<content:encoded><![CDATA[<blockquote><p>நீண்ட காலத்தின் பின்பு, இலங்கை வரலாற்றில் சோஷலிசம் என்ற சொல்லைப் பேரிற் கொண்ட ஒரு கட்சி உருவானமை பிற்போக்குவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளதையும் நாம் அறிவோம். எனவே தான், மு.சோ.க., தனது பேருக்குத் தகுதியான ஒரு கட்சியாக அமைய வேண்டின் அது சகல விதமான குறுகிய இனவாத நோக்கங்களிலும் இருந்து விடுபட்ட ஒரு கட்சியாகத் தன்னை உருவாக்க வேண்டியுள்ளது. இத் தேவையைக் கருதியே அக் கட்சியின் வேலைத்திட்டம் இங்கு விமர்சிக்கபடுகின்றது.</p>
<p>&nbsp;</p></blockquote>
<p><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/images.jpeg"><img alt="images" src="http://thulaa.net/home/wp-content/uploads/2013/02/images.jpeg" width="260" height="194" /></a></p>
<p><span id="more-566"></span></p>
<h3>1. முன்னுரை</h3>
<p>ஜே.வி.பியிலிருந்து பிரிந்து முன்னிலை சோஷலிசக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கியவர்கள் தமது கட்சி வேலைத் திட்டத் தை 44 பக்கங்கள் கொண்ட நீண்ட ஆவணமாக முன்வைத்துள்ளனர்.</p>
<p>இந்த ஆவணத்தைப் பற்றி தமிழ்த் தேசியவாதிகள் மத்தியிலும் இடதுசாரிகள் மத்தியிலும் கணிசமான எதிர்பார்ப்புகள் இருக்க நியாயமுண்டு. அந்த எதிர்பார்ப்புகள் சிலவோ பலவோ நிறைவேறாமல் இருக்க அதிலும் அதிகளவு நியாயமுண்டு. ஏனெனில் மு.சோ.க., ஜே.வி.பியின் கருப்பையில் உருவான சிசு. ஜே.வி.பியின் பேரினவாத அரசியலின் முழு விருத்தியின் போதும் அதிற் பங்காளிகளாயிருந்தோரே இன்று மு.சோ.க. தலைவர்களாய் உள்ளனர். பாராளுமன்றச் சந்தர்ப்பவாதம் ஜே.வி.பியை அதன் ஆதரவுத்தளமான ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களிடம் இருந்து விலக்கி நகர்சார் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு நெருக்கமாக்கிய போது, அதை எதிர்க்காதவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள். அனைத்தினும் முக்கியமாக, எந்த ரோகண விஜேவிரவின் கொள்கைகள் ஜே.வி. பியை அழிவிற்குட் தள்ளி அதன் பின் அணிதிரண்ட பல்லாயிரக் கணக்கான இளைஞர்களைக் கொலைக்களத்திற்கு அனுப்பினவோ அதே விஜேவீரவின் பாதையில்  உறுதியாகத் தொடர்வோர் தாங்கள் மட்டுமே என்று அவர்கள் ஏலவே பன்முறை கூறியுள்ளனர்.</p>
<p>எனவே ஜே.வி.பியின் கொள்கையில் இருந்து குறிப்பிடத்தக்க விலகலை மு.சோ.கவிடம் எவரும் எதிர்பார்த்திருக்க இயலாது. விஜேவீர என்கிற வீரப் படிமம் அவர்கட்குத் தேவைப்படுகிறது என்பதால் விஜேவீரவின் கொள்கைகளைப் பற்றி அவர்கள் அழுத்திப் பேசுகிறார்கள் என ஆறுதல் கொள்ளலாம். ஆனால், இவ்விடத்து, ஜே.வி.பிக்கும் மு.சோ.கட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. அது வெறுமனே தந்திரோபாய அடிப்படை யிலான வேறுபாடு என்றால், முன்போன்ற தந்திரோபாயத் தவறுகளை மு.சோ.கவும் செய்யாமல் இருக்க என்ன உத்தரவாதங்கள் உள்ளன?</p>
<p>எல்லாக் கட்சிகளும் தவறுகளைச் செய்கின்றன. தவறுகட்கான காரணங்களை அறியாது அடுத்தடுத்து நிகழும் தவறுகளைக் தனித் தனியே திருத்துவதன் மூலம் அவ்வாறான தவறுகள் பின்னரும் நிகழாமற் தடுக்கவியலாது.</p>
<p>ஒரே விதமான பாரிய தவறு திரும்பவும் நிகழ்ந்த பின்பும் ஜே.வி.பி. அத் தவற்றுக்கு அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து சுயவிமர்சனம் ஒன்றை மேற்கொள்ளவில்லை. மக்களுக்கு எதிராகத் தான் இழைத்த குற்றங்கட்காக அது மன்னிப்புக் கோரவுமில்லை. இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றப் பாதையில் போய்ச் சீரழிந்ததைக் கண்ட பின்பும், ஜே.வி.பி. அதே பாதையிற் போய்த் தன்னை மேலும் சீரழித்துப் பலவீனப்படுத்திக் கொண்டது. இவை யாவும் ஏன் நடத்தன என்பதைப் பற்றிய ஆழமான ஒரு ஆய்வை மேற்கொள்ள மு.சோ.க. ஆயத்தமா என்பது இன்னமும் தொக்கி நிற்கிற ஒரு கேள்வியாகவே உள்ளது.</p>
<p>மு.சோ.க. தலைமையின் மீது வலிந்து சுமத்தப்பட்டுள்ள ஒரு தமிழ் அடையாளம் சிலரைத் தேசியவாத நோக்கிலும் வேறு சிலரைப் பேரினவாத நோக்கிலும் மு.சோ.கவை விளங்கத் தூண்டலாம். அவ் வாறான அடையாளப்படுத்தலுக்கு வர்க்க நோக்கங்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. நீண்ட காலத்தின் பின்பு, இலங்கை வரலாற்றில் சோஷலிசம் என்ற சொல்லைப் பேரிற் கொண்ட ஒரு கட்சி உருவானமை பிற்போக்குவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளதையும் நாம் அறிவோம். எனவே தான், மு.சோ.க., தனது பேருக்குத் தகுதியான ஒரு கட்சியாக அமைய வேண்டின் அது சகல விதமான குறுகிய இனவாத நோக்கங்களிலும் இருந்து விடுபட்ட ஒரு கட்சியாகத் தன்னை உருவாக்க வேண்டியுள்ளது. இத் தேவையைக் கருதியே அக் கட்சியின் வேலைத்திட்டம் இங்கு விமர்சிக்கபடுகின்றது.</p>
<h3 style="text-align: left;">2. வரலாறு பற்றிய புரிதல்</h3>
<p>வேலைத்திட்டத்தின் முதற் பகுதி இலங்கையின் முதலாளித்துவ முறையின் வளர்ச்சியின் வரலாற்றைப் பற்றியதெனினும், அதிற் சிங்கள பௌத்தக் கண்ணோட்டத்தில் மிகையான ஆரிய சிங்கள மயக்கத்துடன் எழுதப்பட்ட பழைய வரலாறே மீளவும் பதிவாகியுள்ளது. அதை விடவும், பிரபுத்துவ சமூகம் என்ற சொற் தொடரைத் தவிர்க்கு முகமாக, “ஆசியன் (?) உற்பத்தி முறை” என்ற சொற்றொடர் விடாது பாவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பிரபுத்துவத்திற்கும் ஆசிய பிரபுத் துவத்திற்கும் இடையிலான வேறுப்பாட்டில் முக்கியமானது ஆசியாவில் நிலம் எவருடைய தனிச் சொத்தாகவும் இருக்கவில்லை என்பதாகும். எனினும் உழைப்பின் அடிப்படையிலான வர்க்க வேறுபாடு போகச், சமூக உழைப்பின் மீதும் நிலத்தின் பயன்பாட்டின் மீதும் அரசுக்கு மிகுத்த கட்டுப்பாடு இருந்தது. அரசன், மந்திரி, பிரதானிகள், உள்ளுர் அதிகாரிகள் போன்றோர் இருந்து வந்தனர். அவற்றை விட நிலத்தைக் கோவில்கட்கும் தனி மனிதருக்கும் மானியமாக அரசு வழங்கும் முறை இருந்தது. உழைப்பின் பிரிவினை சாதி அமைப்பில் அமைந்து, உயர் சாதியினரின் மேற் தட்டுகளைச் சேர்ந்தோர் முழுச் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தியதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. இவ்வாறான ஒரு சமூக அமைப்பு எவ்வகையிலும் பிரபுத்துவம் அற்ற ஒரு சமூக அமைப்பல்ல.</p>
<p>பிரபுத்துவ முறைகளிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை, முதலாளிய சமூகங்களுள் இருக்கக்கூடிய வேறுபாடுகளுடன் ஒப்பிடலாம். சுயாதீனமான முதலாளித்துவ அமைப்புக்களைக் கொண்ட தொடக்கநிலை முதலாளியத்தின்  முதலாளி தொழிலாளி உறவையும், முதலாளியமும் அரசும் ஒரு பெரிய அமைப்பாக இணைந்து அரச முதலாளியமாகையில் இருக்கக்கூடிய உழைப்போர் உழைப்பைச் சுரண்டுவோர் உறவையும் ஒப்பிடலாம். ஏகபோக முதலாளிய ஆதிக் கத்தின் கீழ், குறிப்பாக நிதி மூலதன் ஆதிக்கத்தின் கீழ், பழைய முதலாளிய முறையின் உற்பத்தி உறவுகள் போல நேரடியான சுரண்டலும் அதையொட்டிய முதலாளி தொழிலாளி வர்க்க உறவு களும் காணப்படுவதில்லை.</p>
<p>எனவே, “ஆசிய உற்பத்தி முறை” என்ற மாக்ஸின் கோட்பாட்டை மிகையாக எளிமைப்படுத்தி இந்தியாவிலும்  இலங்கையிலும் இருந்தது  பிரபுத்துவம் அல்ல எனும் மாயை புகுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அதைவிட, வலிய அரசுகள் சரிவடையும் போது பலவேறு சிற்றரசுகள் தோன்றுவதை நாம் அறிவோம். கண்டி இராச்சியத்தின் போதும் அதற்கு முன்பும் கணிசமான நிலப் பரப்புக்களின் மீது அதிகாரம் செலுத்திய சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் இருந்து வந்துள் ளனர். அது போகத், தனியுடைமையும் செல்வந்தர்களும் இருந்து வந்துள்ளதை அறிவோம். எனினும், இலங்கையின் “ஆசிய உற்பத்தி முறை” என்பது எவ்வாறானதாக இருந்தது என விளக்காமல் அதைப் பற்றிய ஒரு மனோரதியப் படிமமே பிரதியின் பெரும்பகுதியிற் பேணப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையின் முதலாளியம் என்பது தோட்டப் பயிர்ச் செய்கையைத் தளமாகக் கொண்ட சேவைத், தொழிற் துறைகளை விட்டால், நவீன உற்பத்தி முறை சார்ந்ததாக விருத்தி பெறவில்லை. எனவே இலங்கையின் முதலாளியம், வணிக மூலதனமாகவும் தரகு முதலாளியமாகவும் உருப் பெற்றது. இவ்வாறு திரண்ட செல்வம் புதிய பெருங் காணிச் சொந்தக்காரர்களையும் உருவாக்கியது. அதை விடவும் கொலனி ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்களுடன் ஒத்துழைத்த மேட்டுக்குடிகட்குப் பெரும் அளவிலான நிலங்கள் அரசினால் வழங்கப்பட்டுள்ளன.<br />
இலங்கையின் முதலாளிய உற்பத்தி உறவுகள் முழுமையான ஒரு முதலாளிய உற்பத்தி முறைக்குரியனவாக இல்லாததால், நகர் சார்ந்த ஒரு சிறு பிரிவினர் தவிர்ந்து, தொழிலாளர்கள் பிரபுத்துவ சமூக சிந்தனையில் இருந்து தம்மை முற்றாக முறித்துக் கொள்ளாத வர்களாக இருந்தனர். அதன் விளைவாக, இலங்கைச் சமூகம் இன்னமும் குடும்ப ஆதிக்கத்தையும் பிரபுத்துவ சிந்தனையின் பகுதி யான சாதியம், பழமையான மரபுகள் போன்றவற்றையும் கொண்டிருப்பதை நாம் காண முடிகின்றது.</p>
<p>“ஆசிய உற்பத்தி முறை” என்பது ஆசியா முழுவதிலும் ஒரே விதமாக இருக்காததுடன், அது காலத்துடன் மாறியும் வந்துள்ளது. இதைச் சரிவர விளங்கிக் கொள்ளாமல் அது மெச்சத்தக்க ஒரு உற்பத்தி முறை என்ற எண்ணம் தோன்றுமாறு அச் சொற்றொடர் பயன்படுவது பிரபுத்துவ அமைப்பொன்றின் வர்க்க உறவுகளையும் வர்க்க முரண்பாடுகளையும் ஆதிக்கச் சிந்தனையையும் தவற விடுவதற்கே உதவுகிறது.</p>
<h3>3. கொலனியமும் நவகொலனியமும்</h3>
<p>ஏகாதிபத்தியம் நவகொலனியத்தைக் கொலனியக் காலத்திலே திட்ட மிட்டு உருவாக்கியது என்ற விதமாக அறிக்கை விளக்குகிறது. மாறாக, கொலனி ஆட்சிகள் முடிவுக்கு வந்த சூழலிலேயே நவ கொலனியம் உருப்பெற்றது. இறுதிக் கொலனிகள் போராட்டத்தால் விழும்வரை பழைய கொலனிய ஆதிக்கவாதிகள் கொலனிகளைக் கைவிடவில்லை. ஏறத்தாழ முழு ஆசியாவும் ஆபிரிக்காவின் பெரும் பகுதியும் போராடி விடுதலை பெற்ற பின்பே எஞ்சியிருந்த கொலனிகளிற் சிலவற்றுக்குத் தாமாவே முன்வந்து சுதந்திரம் வழங்கினர்.</p>
<p>நவகொலனியத்தின் தோற்றமும் கொலனிகளைப் பெருமளவிற் கொண்டிராத அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக வளர்ந்த காலமும் ஒன்றாக இருப்பதும் கவனிக்கதக்கது. இரண்டாம் உலகப் போரின் பின்பு, குறிப்பாகச் சீன விடுதலையின் பின்பு, பழைய கொலனிய முறைக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான ஒரு வலிய சோசலிஷ முகாம் உருவானதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகச் சந்தை விஸ்தரிப்பின் தேவைகளுமே நவகொலனியத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்தின. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது பழைய கொலனி களில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்த இயலாமற் போனது ஏன் என்பதும் பிரான்ஸ் எவ்வாறு பிரித்தானியாவைவிடக் கூடிய காலத்திற்குத் தனது முன்னாட் கொலனிகளிற் செல்வாக்குச் செலுத்த முடிந்தது என்பதும் முக்கியமான கேள்விகள். நவகொலனியம் என்பது, ஒரு உலகச் சூழலின் நிர்ப்பந்தமே ஒழிய, முதலாளியம் தூர நோக்கிற் தனது கொலனிகளின் எதிர்காலத்தைச் சரிவர அறிந்து முன்கூட்டியே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியதல்ல என்ற தெளிவு நமக்குத் தேவை. ஆனால், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் என்பது, மிகத் தெளிவாகத் தூர நோக்குடன் திட்டமிட்டு செயற்படுத்தும் ஒரு வேலைத் திட்டமாகும்.</p>
<p>1948-78 காலத்தில் இலங்கையின் பொருளாதார முறையைக் குறிக்க, “அரசு ஏகபோக முதலாளித்துவ அமைப்பு” என்ற பதம் அறிக்கையிற் பயன்பட்டுள்ளது. இலங்கையிற் சில துறைகளிற் குறுகிய காலத்திற்கு அரசின் ஏகபோகம் இருந்துவந்ததும் சில கால மாக அதைச் சிலர் “சோசலிஷம்” என்று கருதியதும் உண்மை. ஆனால், இலங்கைப் பொருளாதாரத்தில் சுதேசிய, தரகு, விதேசிய முதலாளித்துவ ஆதிக்கமே இருந்து வந்தது. இலங்கையிற் போன்று, பல ஐரோப்பிய நாடுகளிலும் தேசியமயமான தொழிற்துறைகள் இருந்தன. அவற்றை அரச ஏகபோகத் துறைகள் எனலாம். ஆனால் “அரசு ஏக போக முதலாளிய அமைப்பு” என்பது ஏறத்தாழ முழுத் தொழில் உற்பத்தி துறையும் அரசின் கட்டுபாட்டிலும் அரசு ஒரு முதலாளி வர்க்கத்தின் கருவியாகவும் இருக்கும்போதே செல்லுபடி யாகும்.</p>
<p>ட்ரொட்ஸ்கியச் சொற்பிரயோகங்கள் சிலதைக் கண்மூடித்தனமாகக் கடன்வாங்கியதால் மேற்கூறியவாறான குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நம்ப இடமுண்டு.<br />
எனினும், இன்று நவகொலனியம் இலங்கையை எவ்வாறு உலகமய மாக்கற் சூழ்நிலைக்குள் உள்வாங்கி வருகிறது என்ற புரிதலை மேற்படி வேலைத்திட்டத்தில் காண முடியாதுள்ளது.</p>
<h3>4. சோசலிசப் புரட்சி</h3>
<p>மேலும் மு.சோ. கட்சியின் வேலைத்திட்டம் சோஷலிசப் புரட்சியைப் பற்றியும் சோசலிசப் புரட்சியின் கடமைகளைப் பற்றியும் பேசுகிறது. இலங்கையின் முதலாளிய ஜனநாயகப் புரட்சிகரக் கடமைகளில் எஞ்சியிருப்பவற்றைப் நிறைவு செய்யவே சோசலிசப் புரட்சி என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாளிய ஜனநாயகப் புரட்சி எப்போது நிகழ்ந்தது என்றும் அதன் எந்தப் புரட்சிகரப் பகுதிகள் நிறைவேறியுள்ளன என்றும் அறிக்கையில் விளக்கப்படவில்லை.</p>
<p>இலங்கை ஒரு நவகொலனி என்றால், புரட்சியின் அடுத்த நடவடிக்கை நவகொலனியத்தை எதிர்ப்பதாகவும் அதினின்று விடுபட்ட ஒரு சமூக அமைப்பையும் உருவாக்குவதாக அல்லவா அமைய வேண்டும். ஒரே வீச்சில் நவகொலனியத்திலிருந்து விடுபட்டு சோசலிச அரசை நிறுவுவதென்பது சமசமாஜக் கட்சியின் ட்ரொஸ்கிய சிந்தனைக் குழப்பத்திற்கு மீளுவதே அல்லாமல் வேறெதுவுமல்ல.</p>
<p>இப் பின்னணியில், வேலைத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சோஷலிசப் புரட்சியின் கடமைகள் என்பன மிகவும் கற்பனையானவை யாகவே உள்ளன.</p>
<h3>5. புரட்சிகர கொள்கைப் பிரகடனங்கள்</h3>
<p>இவை எல்லாம் பொதுப்படப் பல இடதுசாரிகளும் முன்வைத்துள்ள சிந்தனைகளாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொருளாதாரத்தை எவ்வாறு நிறுவுவது என்ற பார்வை எங்குமே இருப்பதாகத் தெரியவில்லை. தேசியப் பிரச்சினைக்குப் போதியளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் ஒரு தேசிய இனமாக ஏற்கப்படவில்லை. விஜேவீர 1978 முதல் 1980களின் முற்பகுதி வரையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றிருந்தார். அதே விஜேவீர 1988இல் பச்சை இனவாதப் பாதையில் பயணித்தார். தானும் அதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பதை மு.சோ.க. தீர்மானிக்க வேண்டும்.</p>
<p>தோட்டத் தொழிலாளரின் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ள “பிரசாவுரிமையும்”; சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் பிரச்சனைகளல்ல. அவர்கட்குக் காணி உரிமை, வீட்டுரிமை, முகவரிக்கான உரிமை இல்லை. அவற்றை உறுதிப்படுத்த அவர்கட்கான பிரதேசங்கள் அங்கரிக்கப்பட வேண்டும்.</p>
<p>தமிழரும் முஸ்லிம்களும் மலையக தமிழரும் சிங்களவர் போலத் தேசிய இனங்கள் என்ற அந்தஸ்துப் பெறுவது முக்கியமாகின்றது. அதன் தொடர்ச்சியாகச் சுயநிர்ணயம் பற்றிய கேள்வி எழுகிறது.</p>
<p>சுயநிர்ணயம் என்றால் பிரிவினை என்று அஞ்சி மு.சோ.க. அதைப் பற்றி பேச விரும்பாவிடினும், குறைந்தபட்சம், தேசிய இனங்களின் சுயாட்சி உரிமை அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் பற்றியேனும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு மு.சோ.க. தயங்குவது வருந்தத்தக்கது.</p>
<p>இந்த வேலைத்திட்டம் பலவகைகளிலும் ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் போல நீளுகிற பணிகளின் பட்டியல்கள் எல்லாம் எவ்வாறு அப் பணிகளை நடைமுறைப்படுத்த இயலும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.</p>
<p>எந்த ஒரு புரட்சியினதும் அடிப்படையான கேள்வி “நண்பர் யார், பகைவர் யார்?” என்பதாகும். இறுதி இலக்குப் பற்றிய உறுதி எவ்வளவு முக்கியமோ அதோ அளவுக்கு அதைச் சென்றடையும் பாதையின் நெளிவு சுழிவுகள் பற்றி தெளிவும் அறிவும் முக்கியமானது.</p>
<p>ஒடுக்கப்பட்ட மக்கள் எவராயினும், அவர்களது உடனடியான அச்சங்களுக்குத் தீர்வோ மாற்றோ முன்வைக்காமல் எப் புரட்சியாலும் மக்களை ஐக்கியப்படுத்த இயலாது. இந்த விடயங்கள் பற்றிய தெளிவே மாக்சிய லெனினியவாதிகளையும் ட்ரொட்சியவாதிகளையும் சிறுமுதலாளித்துவ தீவிரவாதிகளையும் வரலாற்றில் வேறுப்படுத்தி வந்துள்ளது.</p>
<p>தம் கண் முன் இருக்கிற, அடிப்படையான, எளிமையான பிரச்சினை களைப் பற்றி மு.சோ.க. நேர்மையாகவும் கவனமாகவும் சிந்தித்து நல்ல முடிவுகட்கு வர வேண்டும். ஜே.வி.பியுடனான முறிவு பேரின வாதத்துடனான முறிவாகவும், சந்தர்ப்பவாதத்துடனான முறிவாகவும் அமையவேண்டுமானால் தேசிய இனப் பிரச்சினை, புரட்சியின் கால கட்டங்கள் போன்ற விடயங்களைப் பகிரங்கமாக விவாதித்து சரியான கொள்கைகளை வந்தடைய மு.சோ.க. துணிய வேண்டும்.</p>
<p>தலைமையில் மாற்றம் என்பது அடிப்படைக் கொள்கையிலும் அதன் கோட்பாட்டுத் தளத்திலும் இருந்து உருவாக வேண்டுமே அன்றி, வெறுமனே தவறுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் ஆட்கள் மாறுவதிலும் மட்டும் இருந்து விடக்கூடாது. அல்லாவிடின் இலங்கையில், குறிப்பாக சிங்கள இளந் தலைமுறையினரிடையே, நேர்மையான மாக்சிச லெனிஸிசக் கருத்துக்கள் சென்றடைவதற்கும் விரிவுபெற்று வளர்வதற் குமான சூழல் தடைப்படும் வாய்ப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும்.</p>
<p>1960களில் இருந்து இலங்கையில் உருவாகி வந்த மாக்சிச லெனினிசப் போக்கின் வளர்ச்சியை உரியவாறு முன்னெடுத்துச் செல்வதில் பலமுனைத் தவறுகள் இடம்பெற்றமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிற் பிரதானமாக அமைந்தது ஜே.வி.பி. இயக்கத்தின் சிறுமுதலாளித்துவ புரட்சி நிலைப்பாடாகும். அதன் அதிதீவிர சந்தர்ப்ப வாதப் போக்கு, குறிப்பாகச் சிங்கள இளைஞர்கள் யுவதிகளிடையே, இலங்கைப் புரட்சி பற்றிய தவறான எண்ணப்பதிவுகளுக்கும் வழிதவறிய திசைவிலகல்களுக்கும் இட்டுச்சென்றுள்ளமையையிட்டு மு.சோ.க. ஆழ்ந்த விமர்சனத்திற்கும் சுயவிமர்சனத்திற்கும் உட்படுவது அவசியம் என்று நாம் கருதுகின்றோம்.</p>
<p><strong><span style="color: #ff0000;">&#8211;</span></strong><br />
<strong><span style="color: #ff0000;">புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் </span></strong><br />
<strong><span style="color: #ff0000;">தத்துவார்த்த அரசியல் ஆய்வுக் குழு </span></strong><br />
<strong><span style="color: #ff0000;">கொழும்பு </span></strong><br />
<strong><span style="color: #ff0000;">16.06.2012</span></strong><br />
<strong><span style="color: #ff0000;">(சிறு திருத்தங்கள் 11.11.2012)</span></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/566/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
