<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>துலா</title>
	<atom:link href="http://thulaa.net/home/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://thulaa.net/home</link>
	<description>t h u l a a . n e t</description>
	<lastBuildDate>Tue, 14 Feb 2012 19:14:25 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்</title>
		<link>http://thulaa.net/home/archives/348</link>
		<comments>http://thulaa.net/home/archives/348#comments</comments>
		<pubDate>Tue, 14 Feb 2012 19:14:25 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=348</guid>
		<description><![CDATA[ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.

அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக மோசமான எரிபொருள் விலை அதிகாரிப்பானது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களது வயிறுகளில் ஓங்கி அடித்த செயலாகும். ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளை மறுத்து ஃபாசிசப் பாதையில் பயணித்து வரும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியே எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே விலை உயர்வுகளால் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது தத்தளித்து வரும் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் ...]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.</p>
<p><span id="more-348"></span></p></blockquote>
<p>அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக மோசமான எரிபொருள் விலை அதிகாரிப்பானது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களது வயிறுகளில் ஓங்கி அடித்த செயலாகும். ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளை மறுத்து ஃபாசிசப் பாதையில் பயணித்து வரும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியே எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே விலை உயர்வுகளால் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது தத்தளித்து வரும் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் மற்றும் அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் மேலும் அதிகரித்த வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் அமிழ்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை எமது புதிய-ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை இவ்விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதையும், அவ்வாறான மக்கள் போராட்டங்களை எமது கட்சி ஆதரித்து நிற்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.</p>
<p>கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மீதான சுமைகள் தாங்க முடியாதவாறு ஏற்றப்பட்டன. குறிப்பாக மூன்று வீத நாணயப் பெறுமதிக் குறைப்புப் பொருட்களின் மீதான விலைகளை அதிகரிக்கச் செய்து கொண்டன. சம்பள உயர்வு மறுக்கப்பட்டு விலை உயர்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளை முறையே ரூபா 12, ரூபா 31, ரூபா 35 என்பனவற்றால் உயர்த்தியுள்ளமை சகல நிலைகளிலும் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள நேரடித் தாக்குதலாகும். தனியார் போக்குவரத்துத் துறையினர் நடாத்திய ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு காரணமாக இருபது வீத கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவதிப்படும் மக்களுக்கு இக்கட்டண அதிகரிப்புப் பெரும் சுமையாகியுள்ளது. அவ்வாறு டீசல் விலை உயர்வானது சகல பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை இயல்பாகவே கொண்டு வந்துவிட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விலைகள் மேலும் உயர்த்தப்படும். அதேபோன்று மண்ணெண்ணைக்கான விலை அதிகரிப்பு மிகக் குறைந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்ந்து வரும் கிராமப்புற விவசாயிகள் மீனவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதுவரை காலமும் பேரினவாதத்தினால் மறைக்கப்பட்டு வந்த பொருளாதார நெருக்கடி இப்போது முழு வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன் ஆளும் வர்க்கத்தின் சுயரூபத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும். இதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதை எமது கட்சி சுட்டிக்காட்டுவதுடன், அத்தகைய வெகுஜனப் போராட்டங்களை ஆதரித்து அவற்றில் கலந்து கொள்ளவும் செய்கிறது.<br />
<span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>ஊடகங்களுக்கான அறிக்கை                            </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>14.02.2012</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி</strong></span></p>
<blockquote><p>&nbsp;</p></blockquote>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/348/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு பயணத்தின் கதை</title>
		<link>http://thulaa.net/home/archives/344</link>
		<comments>http://thulaa.net/home/archives/344#comments</comments>
		<pubDate>Thu, 09 Feb 2012 10:41:01 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=344</guid>
		<description><![CDATA[அமெரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்கச் சனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததாக நமக்குச் சொல்லப்பட்டது. பின்பு அமெரிக்க அரசுத் திணைக்களத்திலிருந்து அழைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. இரா. சம்பந்தனைத் தலைவராகக் கொண்ட நால்வர் குழு ஒக்ற்றோபர் 25ம் திகதி விமானமேறியது. இது நல்ல வாய்ப்பு எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆரவாரித்தன. புலிகளின் தோல்வியை அடுத்து மகிந்த சிந்தனை ஆட்சியின் பேரினவாதச் செய்நிரல் துரிதமாக முன்னெடுக்கப்படும் ஒரு சூழலிற், கூட்டமைப்பின் அரசியல் இயலாமையின் அரசியலாகவே இருந்துவருகிறது. வடக்கு-கிழக்கில் வாக்குக்கள் பெறும் அலுவலைத் தவிர வேறெதையுமே கவனியாத கூட்டமைப்பு, இந்திய அழுத்தத்தின் கீழ் அரசாங்கத்துடன் பதினொரு முறை பேசியும் அரசாங்கத் தரப்பிலிருந்து எதையுமே வெல்லத் தவறிவிட்டது. இந் நிலையில் அமெரிக்காவின் ‘அழைப்பு’ நீரில் மூழ்குகிறவனின் கைக்கு எட்டிய ஒரு கயிறாகத் தெரிந்தது.
அந்த அழைப்புப் பற்றி ஐயங்கள் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்கச் சனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததாக நமக்குச் சொல்லப்பட்டது. பின்பு அமெரிக்க அரசுத் திணைக்களத்திலிருந்து அழைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. இரா. சம்பந்தனைத் தலைவராகக் கொண்ட நால்வர் குழு ஒக்ற்றோபர் 25ம் திகதி விமானமேறியது. இது நல்ல வாய்ப்பு எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆரவாரித்தன. புலிகளின் தோல்வியை அடுத்து மகிந்த சிந்தனை ஆட்சியின் பேரினவாதச் செய்நிரல் துரிதமாக முன்னெடுக்கப்படும் ஒரு சூழலிற், கூட்டமைப்பின் அரசியல் இயலாமையின் அரசியலாகவே இருந்துவருகிறது. வடக்கு-கிழக்கில் வாக்குக்கள் பெறும் அலுவலைத் தவிர வேறெதையுமே கவனியாத கூட்டமைப்பு, இந்திய அழுத்தத்தின் கீழ் அரசாங்கத்துடன் பதினொரு முறை பேசியும் அரசாங்கத் தரப்பிலிருந்து எதையுமே வெல்லத் தவறிவிட்டது. இந் நிலையில் அமெரிக்காவின் ‘அழைப்பு’ நீரில் மூழ்குகிறவனின் கைக்கு எட்டிய ஒரு கயிறாகத் தெரிந்தது.</p>
<p>அந்த அழைப்புப் பற்றி ஐயங்கள் சில இப்போது எழுந்துள்ளன. கூட்டமைப்பினருக்கான அமெரிக்க அரசுத் திணைக்கள அழைப்பு எழுத்தில் வந்ததா? வந்திருப்பின், அதையிட்டுக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரிடம் இலங்கை அரசாங்கம் ஒரு விளக்கத்தைக் கேட்டுப் பெற்றிருக்கும்;. அப்படி நடந்ததற்கு ஒரு ஆதாரமுமில்லை. வேறு வகையில் அழைப்பு வந்திருந்தால், எவர் எந்த அடிப்படையில் அழைத்தார் என்று தமிழ் மக்களுக்கு ஆதாரங்களுடன் கூறுவதற்குக் கூட்டமைப்பினருக்கு ஒரு கடப்பாடுண்டு. நமக்குப் பலருங் கூறியதற்கு மாறாகக், கூட்டமைப்பினருடன் அரசுத் திணைக்கள அலுவலர்களின் சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லையெனவும் அமெரிக்க அரசுத் திணைக்களத்தினரைச் சந்திக்க எவருக்கும் உள்ள உரிமையையே கூட்டமைப்பினர் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அரசுத் திணைக்களம் கூறியது.</p>
<p>சந்திப்பிற்குப் பின்பு, கூட்டறிக்கையோ அதிகாரபூர்வமான அல்லது தனிப்பட்ட முறையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்க அரசுச் செயலாளர் திருமதி கிளின்ற்றனைச் சந்திப்பார்களெனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனைச் சந்திப்பார்களெனவும் அவர்கள் புறப்படு முன் நமக்குச் சொன்னவர்கள், எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னார்களென்று நமக்கு இதுவரை சொல்லப்படவில்லை.</p>
<p>போய்வந்த பின்பு அழைப்பைப் பற்றியும் அங்கு பேசித் தீர்த்தவை பற்றியும் அமர்க்களப்படுத்த முன், அந்த அழைப்பு மடலின் பிரதியை, எல்லாத் தமிழ் மக்களும் இல்லாவிட்டாலும், தங்கள் ஆதரவாளர்க ளாவது கண்டு மகிழ ஊடகங்கள் மூலம் வழி செய்வார்களா?</p>
<p>அமெரிக்க ‘அழைப்பும்’ பயணமும் அரசியற் பெறுமானமற்றவை என இப்போது தெளிவாகிவிட்டாலும் சிங்களப் பேரினவாதிகள் அதில் ஒரு விதமான ஆதாயம் தேடுகின்றனர். கூட்டமைப்பினர் இன்னொரு விதமான ஆதாயம் தேடுகின்றனர். ஆனால், தமிழரசுக் கட்சியும் பின்பு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்போதும் செய்துவந்துள்ளது போல, அழைப்யையும் சந்திப்பின் விளைவுகளையும் பற்றிய தகவல்கள் என்றென்றும் மூடுமந்திரமாகவே வைக்கப்பட்டிருக்;கும் என்பதில் ஐயமில்லை.</p>
<p>அமெரிக்கா உண்மையாகவே கூட்டமைப்பினருக்கு முக்கித்துவம் கொடுத்திருந்தாலும், தமிழ் மக்கள் அதையிட்டு மகிழவியலாது. கூட்டமைப்பினருக்குக் கிடைத்துவந்த இந்திய அழைப்புக்களைப் போல அமெரிக்க அழைப்பெதுவும் வருமாயின், அதன் உள்நோக்கங்கள் என்னவாக இருக்கலாம் எனத் தமிழ் மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அமெரிக்கா என்றுமே தமிழ் மக்களின் நண்பனோ இரட்சகனோ அல்ல. இந்தியாவிடம் முறையிட்டு முறையிட்டுக் களைத்த நிலையில் அமெரிக்காவுக்கு போய் வந்ததன் மூலம் தமிழ் மக்களை மேலுஞ் சில காலம் ஏமாற்றக் கூட்டமைப்பினருக்கு ஒரு வாய்ப்பக் கிட்டியுள்ளது. அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த மேட்டுக் குடிகள் அதற்கு உதவியுள்ளனர். அது தான் இப் பணயத்தின் கதை.</p>
<p>தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், தம்மை மக்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்,  கூட்டமைப்பினருக்குச் சில கடமைகள் உள்ளன: இன்னமும் முகாங்களில் வாழ்வோரின் நிலை, மீளக் குடியமர்த்தப்பட்டோரின் நிலை, இந்திய மீன்பிடி இழுவைப்படகுகளின் பாதிப்பு, தமிழ் மீனவரின் மீன்பிடிப்பு உரிமை மறுப்பு, சம்பூர் நிலப்பறிப்பால் பாதிக்கப்பட்டேரின் நிலை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறுவதற்கான உரிமை மறுப்பு என்பன போன்று மக்கள் பிரச்சனைகள் பல அவர்களின் கவனிப்பை வேண்டி அலறுகின்றன. கவனிப்பார்களா?</p>
<p>பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுடைய நிலைமைகளைக் கேட்டறிய மனம் வராதவர்களுக்கு அம் மக்கள் சார்பாக எவருடனும் பேசுவதற்கு என்ன விதமான தார்மிக உரிமை உண்டு என்பதைத் தமிழ் மக்கள் அவர்களிடம் உரக்கக் கேட்க வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>ஆசிரியர் தலையங்கம், செம்பதாகை இதழ் 11</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/344/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கசகறணம் :வித்தியாசமான ஒரு நல்ல நாவல்</title>
		<link>http://thulaa.net/home/archives/339</link>
		<comments>http://thulaa.net/home/archives/339#comments</comments>
		<pubDate>Tue, 18 Oct 2011 04:56:54 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=339</guid>
		<description><![CDATA[கசகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00

இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.
மிக முக்கியமாகக், ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><em><strong>க</strong>சகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00</em></p>
<p><strong><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2011/10/Book-Caver-Kashakar.jpg"><img title="Book Caver Kashakar" src="http://thulaa.net/home/wp-content/uploads/2011/10/Book-Caver-Kashakar-191x300.jpg" alt="" width="191" height="300" /></a></strong></p>
<p>இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.</p>
<p>மிக முக்கியமாகக், குறிப்பாக யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் மனிதரது இயல்பான நடத்தைக்குரியனவாக நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளமை மெச்சத்தக்கது.</p>
<p>நாவல் என்ற வகையில் கனதியான கதைப்பொருளைக் கொண்டிருந்தும், சுவைபடக் கதை கூறும் ஆசிரியரின் ஆற்றல் பொதுவாகவே பல இடங்களிலும் நேர்த்தியுடன் வெளிப்பட்டபோதிலும், சில குறைபாடுகள் வாசகர்களிடம் மிகுதியான பொறுமையை வேண்டுகின்றன. முக்கியமாக, இரண்டு பாகங்களாக அமைந்துள்ள இந் நாவலின் முதற் பாகத்தில் கதையின் ஓட்டத்திற்குத் தடையாக என்று சொல்லக் கூடிய அளவுக்கு வெறுமனே சுவாரசியங் கருதித் தரப்பட்டுள்ள விவரங்களைக் கூறவேண்டும். அடுத்ததாக, முதற் பகுதியில் கதை கூறுபவரது மொழி வரன்முறையானதெனக் கூறப்படுகின்ற மொழி வழக்குக்கும் பிரதேச உரைநடை மொழி வழக்குக்குமிடையே ஊசலாடுவதைக் கூறலாம். மட்டக்களப்பு மொழி வழக்;குடன் பரிச்சயமான வாசகருக்கும் சொற்களின் அச்சு வடிவம் இடைஞ்சல் ஏற்படுத்தலாம். ஏனெனில் வாக்கியங்களின் சொற்பிரிப்பு பேச்சு மொழியின் சொற்பிரிப்புடன் சிறிது முரன்படுகின்ற போதும் வாசிப்பில் தடங்கல் ஏற்பட இடமுண்டு;. பிராந்திய மொழியுடன் ஓரளவு பரிச்சயமுள்ள  வாசகர், முற்பகுதியின் முற்பாதியைக் கடந்துவிட்டபின்பு வாசிப்புப் பெருமளவும் எளிதாகி விடுகிறது. எனினும், அக்கறையுள்ள ஒரு வாசகருக்குக் கூட, முற்கூறிய குறைபாடுகள் வாசிப்பைத் தொடர்வதற்கு தடையாகலாம்.</p>
<p>பொதுவாகவே தமிழகத்தில் உள்ள வாசர்களுக்குத் தமிழ்நாட்டுப் பிரதேச-சமூக வட்டார வழக்குகள் பிரச்சினையாகக் கூறப்படுவது குறைவு. ஈழத்துப் படைப்பொன்றின் மொழி வழக்குச் பெருமளவும் செம்மையான மொழி வழக்கைச் சார்ந்திருக்கும் போதிலும் அதற்கு அடிக்குறிப்பு வேண்டுகின்ற சூழல் அங்குண்டு. இந்த நாவலுக்கு பின்னிணைப்பாக தரப்பட்டுள்ள பிரதேச மொழிச் சொற்களுக்கான விளக்கங்கள் 100 சொற்களை மட்டும் தெரிந்து எந்தவிதமாக தர்க்கரீதியான வரிசைப்படுத்தலும் இல்லாது (ஒரு சில தவறாகவும்) வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான குறை மிகுந்த ஒரு “அகராதி&#8221; தேவையா என்பது தான் என் மனதில் எழுந்த கேள்வி. ஒரு நல்ல படைப்பாளி தனது நூலை வெளியிடப் பிறரின் தயவை எதிர்பார்க்கிற அவலத்தின் ஒரு வருந்தத்தக்க வெளிப்பாடாகவே இதைக் கூற முடியும்.</p>
<p>நூலின் வெளிப்புறமும் அச்சமைப்பும் நேர்த்தியாக உள்ளமை மெச்சத்தக்கது. பௌசர் வழங்கிய முன்குறிப்பில் “நமது விமர்சன உலகில் உள்ள படைப்பு சார்ந்த குறைபாடுகளை மீறி&#8230; என்னை இப்படைப்பு பாதித்திருக்கின்றது” என்ற கூற்று எதைக் குறிக்கின்றது என்று விளங்கவில்லை. படைப்புச் சார்ந்த தராதரங்கள் இந்த நூலில் பாராட்டத்தக்களவுக்குப் பேணப்பட்டுள்ளன என்பதே என் எண்ணமாகும்.</p>
<p>எனினும் இந்த நூலை வெளிக்கொண்டுவர உதவிய பௌசருக்கு நாமும் நன்றியுடையோராவோம்.</p>
<p>இந்த நூல் தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றிய அக்கறையுள்ள அனைவரும் கவனத்துடன் வாசிக்கத் தகும் என்று பரிந்துரைப்பேன்.</p>
<p><strong><span style="color: #ff0000;">&#8211;</span></strong></p>
<p><strong><span style="color: #ff0000;">சிவா<a href="http://thulaa.net/home/wp-content/uploads/2011/10/Book-Caver-Kashakar.jpg"><br />
</a></span></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/339/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மர்ம மனிதன் பற்றிய உண்மைகளை மக்கள் NDMLP தோழர்களுக்கு எடுத்துக் கூறினர்</title>
		<link>http://thulaa.net/home/archives/335</link>
		<comments>http://thulaa.net/home/archives/335#comments</comments>
		<pubDate>Tue, 06 Sep 2011 17:20:01 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=335</guid>
		<description><![CDATA[
06.09.2011
மர்ம மனிதனின் நடமாட்டம் பற்றி மக்கள் மத்தியில் பேசப்படுவது கட்டுக்கதைகளோ வெறும் இட்டுக்கட்டுதல்களோ அல்ல. அல்லது சிலர் கூறுவது போன்று மக்களின் மனப் பிராந்தியோ, மாயையோ அல்ல. கடும் கறுப்பு நிறம் கொண்ட உருவ அமைப்பும் கோரமான முகமூடியும் கொண்ட தோற்றத்துடனேயே இம் மர்ம மனிதன் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கிக் கொள்கிறான். குறிப்பாகப் பெண்கள் மீது தாக்கியும் பயப்பீதி கொள்ள வைத்தும் இம் மர்ம மனிதன் அட்டகாசம் செய்து வருவதைப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அது பற்றி  அச்சம் பீதியுடன் விபரிக்கின்றனர். அதேவேளை இம் மர்மமனிதனைப் பிடிப்பதற்காகத் துரத்திச் செல்லும் மக்களை ராணுவத்தினர் அவ்வப் பகுதிகளில் தாக்கியும், வீடுகளைச் சேதப்படுத்தியுமுள்ளதை மக்கள் நேரடியாக எமக்குக் காட்டி மர்மமனிதனைப் பார்த்த கதைகளையும் எடுத்துரைத்தனர். அத்துடன் இம் மர்ம மனிதனை ராணுவத்தினர் பாதுகாத்து வருவதைத் தாம் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2011/09/header.jpg"><img class="aligncenter size-medium wp-image-336" title="header" src="http://thulaa.net/home/wp-content/uploads/2011/09/header-300x77.jpg" alt="" width="300" height="77" /></a></p>
<p><strong>06.09.2011</strong></p>
<p>மர்ம மனிதனின் நடமாட்டம் பற்றி மக்கள் மத்தியில் பேசப்படுவது கட்டுக்கதைகளோ வெறும் இட்டுக்கட்டுதல்களோ அல்ல. அல்லது சிலர் கூறுவது போன்று மக்களின் மனப் பிராந்தியோ, மாயையோ அல்ல. கடும் கறுப்பு நிறம் கொண்ட உருவ அமைப்பும் கோரமான முகமூடியும் கொண்ட தோற்றத்துடனேயே இம் மர்ம மனிதன் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கிக் கொள்கிறான். குறிப்பாகப் பெண்கள் மீது தாக்கியும் பயப்பீதி கொள்ள வைத்தும் இம் மர்ம மனிதன் அட்டகாசம் செய்து வருவதைப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அது பற்றி  அச்சம் பீதியுடன் விபரிக்கின்றனர். அதேவேளை இம் மர்மமனிதனைப் பிடிப்பதற்காகத் துரத்திச் செல்லும் மக்களை ராணுவத்தினர் அவ்வப் பகுதிகளில் தாக்கியும், வீடுகளைச் சேதப்படுத்தியுமுள்ளதை மக்கள் நேரடியாக எமக்குக் காட்டி மர்மமனிதனைப் பார்த்த கதைகளையும் எடுத்துரைத்தனர். அத்துடன் இம் மர்ம மனிதனை ராணுவத்தினர் பாதுகாத்து வருவதைத் தாம் நேரடியாககக் கண்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.</p>
<p>இத்தகைய மர்ம மனிதனின் அட்டகாசங்கள் நிகழ்ந்த குடாநாட்டின் வலிகாமம், வலிமேற்கு, வலிவடக்கு, வலிகிழக்கு, வடமராட்சி ஆகிய பிரதேசங்களின் பல கிராமங்களுக்கு எமது கட்சியின் வடபிராந்தியக் குழு உறுப்பினர்களும் நானும் நேரடியாகச் சென்று மக்களிடம் கேட்டறிந்த போது அவர்கள் தாம் நேரில் கண்ட மர்ம மனிதன் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தனர் நாங்கள் இரவு எட்டுமணியளவில் வலிகிழக்கின் ஒரு கிராமத்தின் சனசமூக நிலைய முன்றலில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருநந்த போது பக்கத்துக் கிராமத்தில் மக்கள் பெரும் கூச்சலிட்டு அவலக்குரல் எழுப்பியதைக் கேட்க முடிந்தது. அவ்விடத்திற்குச் சென்று விசாரித்த போது மர்ம மனிதன் வீட்டுக்குப் பின்னால் வந்ததைக் கண்டதாகக் கூறினர். மக்கள் ஒன்று சேர்ந்து கலைத்துச் செல்ல அவன் ஓடி மறைந்தாகவும் கூறினர். அங்கு பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் முதியவர்கள் மிகுந்த அச்சத்தில் பீதியில் இருந்ததைக் காணமுடிந்தது. இவ்வாறு தான் பெரும்பாலன பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகிறது.</p>
<p>இத்தகைய சூழலில் இம் மர்ம மனிதன் நடமாட்ட அச்சத்தினால் மக்கள் இரவு முழுவதும் நித்திரை இன்றி குடும்பங்கள் ஒரே இடத்தில் குழுமி விழித்திருக்க வேண்டிய துயர நிலையை எடுத்து விளக்கினர். இதனால் தொழில்களுக்குச் செல்ல வேண்டியவர்களும் மாணவர்களும் கடும் பாதிப்பைப் பெற்று வருகிறார்கள். பெண்கள் தத்தம் தொழில்களுக்கு பகல் வேளைகளில் கூடச் செல்வதற்கு அஞ்சும் நிலையே காணப்படுகின்றது. வன்னி இழப்புக்கள் அவலங்களுக்குப் பின்பு இப்படி ஒரு நிம்மதியற்று அச்சம் பீதியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையை அவர்கள் கடும் துயரத்ததுடன் எடுத்துக் கூறினர்.</p>
<p>இம் மர்ம மனித நடமாட்ட அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் மக்களையும் பார்க்கும் போது அவர்கள் முற்றிலும் உழைப்பாளி மக்களான அன்றாடம் தொழில் புரியும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்களாக இருப்பதை அவாதானிக்க முடிந்தது. பொருளாதார, ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய மக்கள் வாழ்ந்து வரும் கிராமங்களிலேயே மர்ம மனிதனின் நடமாட்டமும் அச்சறுத்தலும் ராணுவத்தின் தாக்குதல்களும் அதிகம் இடம் பெற்றிருப்பது அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இது ஏன் என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. எவ்வாறயினும் மலையகத்தில் தொடங்கி கிழக்கு மாகாணத்தின் ஊடாக இப்போது வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் உச்சமாகத் தலை விரித்தாடிவரும் மர்ம மனிதன் அச்சுறுத்தலுக்குப் பின்னால் பேரினவாத ஆளும் வர்க்க அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருந்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை. தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்திருக்கும் பேரினவாத ஒடுக்கு முறையின் ஒரு வடிவமாகவே இம் மர்ம மனிதன் அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்ற முடிவிற்கே வரவேண்டும். அதன் உச்ச நிலையே இப்போது குடாநாட்டின் கிராமங்களில் பரவலாக இடம் பெற்றுவருகிறது.</p>
<p>எனவே இம் மர்ம மனிதன் நடமாட்டத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக மக்கள் ஒன்று திரண்டு தங்களையும் தமது கிராமங்களையும் பாதுகாத்து வரும் தற்காப்பு நடவடிக்கை முற்றிலும் நியாயமானதேயாகும். அத்துடன் இம் மர்ம மனிதன் நடமாட்டத்தை முற்றாக நிறுத்தக் கோரி தமிழ்க் கட்சிகள் சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஏற்பாடு செய்து வரும் ஒரு நாள் உண்ணாவிரத நடவடிக்கையை எமது புதிய – ஜனநாயக மாக்சிச –லெனினிசக் கட்சி பூரணமாக ஆதரிக்கின்றது. அதில் பங்கு கொள்ள முன்வந்துள்ளது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>சி.கா. செந்திவேல் </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>பொதுச் செயலாளார் </strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>புதிய – ஜனநாயக மாக்சிச –லெனினிசக் கட்சி</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/335/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மூவர் மரணதண்டனைக்கு எதிராகப் போராடும் சக்திகளுடன் எமது கட்சி இணைந்து நிற்கிறது  &#8211; NDMLP</title>
		<link>http://thulaa.net/home/archives/332</link>
		<comments>http://thulaa.net/home/archives/332#comments</comments>
		<pubDate>Sun, 04 Sep 2011 16:52:54 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=332</guid>
		<description><![CDATA[ஊடக அறிக்கை &#8211; 02.09.2011
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த வெகுஜனப் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கநிலை வெற்றியாகும்.
உலகநாடுகளில் பெரும்பாலானவற்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பூரணமாக இரத்துச் செய்யப்பட்டோ இடைநிறுத்தப்பட்டோ இருக்கும் நிலையில் ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடெனப் பேசப்படும் இந்தியாவில் இந்த மூவர் மீது மட்டுமன்றி, முற்றாகவே மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடை செய்ய வேண்டும். இந்த மூவர் மீதான மரண தண்டனை நிறைவேற்றம் முழுமையாக இரத்துச் செய்யப்படுவதுடன், மரணதண்டனை நிறைவேற்றம் பூரணமாகவே சட்டப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மரண தண்டனைகளுக்காக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேல் நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>ஊடக அறிக்கை &#8211; 02.09.2011</strong></p>
<p>முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த வெகுஜனப் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கநிலை வெற்றியாகும்.</p>
<p>உலகநாடுகளில் பெரும்பாலானவற்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பூரணமாக இரத்துச் செய்யப்பட்டோ இடைநிறுத்தப்பட்டோ இருக்கும் நிலையில் ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடெனப் பேசப்படும் இந்தியாவில் இந்த மூவர் மீது மட்டுமன்றி, முற்றாகவே மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடை செய்ய வேண்டும். இந்த மூவர் மீதான மரண தண்டனை நிறைவேற்றம் முழுமையாக இரத்துச் செய்யப்படுவதுடன், மரணதண்டனை நிறைவேற்றம் பூரணமாகவே சட்டப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்.</p>
<p>இலங்கையில் மரண தண்டனைகளுக்காக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேல் நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு முறையே மேன்முறையீடு செய்து தண்டனையை நீக்கும் அல்லது குறைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் மேல்நீதிமன்றம் விதிக்கும் ஒவ்வொரு மரணதண்டனைத் தீர்ப்பினை அடுத்தும் ஜனாதிபதி அதனைப் பொதுவாகவே இடைநிறுத்தி வைக்கும் நடைமுறை பேணப்பட்டு வருவதுடன், பொதுவாகவே மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதில்லை. இலங்கையிலும் மீண்டும் மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளன. இந்தியாவில், இலங்கையில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் எல்லா வழக்குகளிலும் மரணதண்டனை நிறைவேற்றப்படக் கூடாது.</p>
<p>மக்களைக் குற்றச் செயல்களுக்குள் தள்ளுவதும், மக்கள் மீது குற்றச் செயல்களைப் புரிவதும் சமூக அமைப்பின் அல்லது ஆட்சியின் விளைவுகளே. அதேவேளை குற்றச்செயல்களைக் கடுமையான தண்டனைகள் மூலம் நிறுத்திவிட முடியாது வரலாற்றுப் பட்டறிவாகும். தண்டனைகளின் மூலம் உடனடியாகவும், சிறிதளவும் குற்றச் செயல்களைக் குறைக்க முடியுமானாலும், பண்பாட்டு ரீதியான வளர்ச்சி மூலமே படிப்படியாகவே குற்றச்செயல்களைக் குறைக்க முடியும்.</p>
<p>திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு, சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படக் கூடாது என்பதே நாகரீகமடைந்த உலக சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்டவர்களும் வேறொரு விதத்திலேனும் வாழ்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும்.</p>
<p>ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி ஜெயின் விசாரணை அறிக்கை பல்வேறுவிதமான விடயங்கள் பற்றிக் கேள்வியெழுப்பி விசாரிக்கும்படி கேட்டிருந்தபோதும் அவை பற்றி விசாரிக்கப்படவில்லை. பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றோர் மட்டுமே இவ்வழக்கில் மோசமாக தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை பற்றி இன்னும் பல உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வுண்மைகளை மறைக்கும் வகையிலும், பழிவாங்கும் மனோபாவத்துடனும் இந்த மூவர் மீதான மரணதண்டனைத் தீர்ப்பை 21 வருடங்களுக்குப் பின்னர் திடீரென நிறைவேற்ற முயற்சிப்பது நியாயமானதல்ல.</p>
<p>தனிநபர் படுகொலைகளையும், அரசியல் படுகொலைகளையும் எமது கட்சி அங்கீகரிக்கவில்லை. அவை எதிர்ப்பு நடவடிக்கையோ, போராட்ட வழிமுறையோ அல்ல அவ்வாறான கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அக்கொலைகளைப் புரிந்தோர் சட்டப்படி அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அது நிறைவேற்றப்படக் கூடாது. என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.</p>
<p>1970களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தோருக்கு அத்தண்டனை நீக்கப்பட வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட வெகுஜன இயக்கத்தில் அன்று எமது கட்சியின் தலைவர்கள் பங்கு கொண்டு தீவிரமாகச் செயல்பட்டனர்.</p>
<p>எனவே இன்று மூவர் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக எழுந்துள்ள வெகுஜன இயக்கத்தில் இந்திய மாக்சிச லெனினிசக் கட்சிகள் இயக்கங்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும் புலம்பெயர்ந்த நாடுகளின் முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் எமது கட்சி இணைந்து நிற்கிறது. மரண தண்டனையை அகற்றக் கோடுகிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>இ. தம்பையா</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>சர்வதேச அமைப்பாளர்</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/332/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மக்கள் அணிதிரண்டு தம்மைத் தாமே தற்காக்கும் நடவடிக்கைகளை எமது கட்சி வரவேற்கின்றது &#8211; NDMLP</title>
		<link>http://thulaa.net/home/archives/329</link>
		<comments>http://thulaa.net/home/archives/329#comments</comments>
		<pubDate>Wed, 24 Aug 2011 06:05:33 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=329</guid>
		<description><![CDATA[ஊடகங்களுக்கான அறிக்கை    21.08.2011
அண்மைய வாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள &#8220;கிறீஸ் பூதம்&#8221; என்னும் பெயரிலான மர்ம மனிதத் தாக்குதல் பேரினவாத ஒடுக்குமுறையின் மற்றொரு கோர வடிவமேயாகும். இது தற்செயலானதாகவோ அல்லது கீழ்மட்டத்திலிருந்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட உள்நோக்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகைய கிறீஸ் பூத மர்ம மனிதர்களால் மலையகத் தமிழ் மக்களும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்களுமே தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறார்கள். இதனால் அச்சம் பீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட அலுவல்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாதுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் கடும் பாதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளும் அதிகாரத் தரப்பில் இருந்து இது பற்றி அக்கறைப்படுவதாகவோ அல்லது அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவோ இல்லை. அதனால் இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் அதிகாரபீடத்தின் ஆசீர்வாதத்துடன் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஊடகங்களுக்கான அறிக்கை    21.08.2011</p>
<p>அண்மைய வாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள &#8220;கிறீஸ் பூதம்&#8221; என்னும் பெயரிலான மர்ம மனிதத் தாக்குதல் பேரினவாத ஒடுக்குமுறையின் மற்றொரு கோர வடிவமேயாகும். இது தற்செயலானதாகவோ அல்லது கீழ்மட்டத்திலிருந்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட உள்நோக்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகைய கிறீஸ் பூத மர்ம மனிதர்களால் மலையகத் தமிழ் மக்களும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்களுமே தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறார்கள். இதனால் அச்சம் பீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட அலுவல்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாதுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் கடும் பாதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளும் அதிகாரத் தரப்பில் இருந்து இது பற்றி அக்கறைப்படுவதாகவோ அல்லது அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவோ இல்லை. அதனால் இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் அதிகாரபீடத்தின் ஆசீர்வாதத்துடன் இடம்பெறுவாதாகவே நம்பவேண்டியுள்ளது. எனவே தொடரும் மக்கள் மீதான இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்களை எமது புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை மக்கள் அணி திரண்டு தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளும் வகையில் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் எமது கட்சி வரவேற்கின்றது. அத்துடன் அக் கிறீஸ் பூதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அரசாங்கம் உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.</p>
<p>மலையகத்தின் காவத்தைப் பிரதேசத்தில் ஆரம்பித்த &#8220;கிறீஸ் பூத&#8221; மர்ம மனிதத் தாக்குதல்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களுக்குப் பரவிக் கொண்டன. அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கும் வடக்கின் வன்னிப் பிரதேசத்திற்கும் இப் போது யாழ்க்குடாநாட்டிற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தமிழர், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களைக் குறிவைத்தே மேற்படி கிறீஸ் பூதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வரும் அதேவேளை குறிப்பாகப் பெண்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படுவதும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டு இரத்தம் சிந்த வைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் பல்வேறு ஊகங்களையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இக் கிறீஸ் பூத மர்ம மனித அச்சுறுத்தல்களுக்கு அவ்வப் பிரதேசங்களில் பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுத்து வருவதை மக்கள் தாம் நேரடியாகக் கண்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். மக்களைத் தாக்கி அச்சுறுத்தி வரும் கிறீஸ் பூதத்தைக் கண்டு பிடித்துக் கைது செய்ய இயலாத பொலிசார் அதனைத் துரத்திச் சென்று பிடிக்க முற்படும் மக்கள் மீதும், தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ள அணி திரளும் மக்கள் மீதும் தாக்குதல்களும் கைதும், தடுத்து வைப்பும் செய்து வரும் வினோதத்தையே காண முடிகிறது. இவ்வளவும் நடந்த பின்பும் ஜனாதிபதியோ அன்றி, உயர் பாதுகாப்புப் பீடமோ இக்கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் பற்றி மௌனம் காத்து வருவது ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் தலையிட்டு மேற்படி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கிறீஸ் பூத மனித மர்மத் தாக்குதல்களை நிறுத்தவும் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என எமது கட்சி வற்புறுத்திக் கூறுகின்றது.</p>
<p>சி. கா. செந்திவேல்</p>
<p>பொதுச் செயலாளர்,</p>
<p>புதிய ஜனநாயக (மார்க்சிய லெனினிய) கட்சி.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/329/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உயர ஏறுவோம் (கவிதை)</title>
		<link>http://thulaa.net/home/archives/322</link>
		<comments>http://thulaa.net/home/archives/322#comments</comments>
		<pubDate>Tue, 19 Jul 2011 06:56:27 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=322</guid>
		<description><![CDATA[
&#160;
முன் குறிப்பு…
என்மேல் எந்த தேசியச் சாயமோ, சாதியச் சாயமோ, மதச் சாயமோ பூசிவிடாதீர்,
உலக அடிமைகளில் ஒருவனாக
நான்
வெறுமனே,
என்னையும் அவனையும் பற்றிய ஒரு கதை சொல்லப் போறேன்.
இங்கே நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமோ அல்ல,
நான் இல்லாத எல்லாமுமே அவன்….
*

முன்னொரு நாளில்
நட்சத்திரக் கொடியுடன் வந்தான் ஒருவன்
தான் முகிலை நோக்கி உயர ஏறத் துணை செய்ய வேண்டும்
என்றான்.
எனைத் தன்னால் வானில் பறக்க வைக்க முடியும் என்றே
பல கதைகள் சொன்னான்
அவன் மாய வார்த்தைகளில் மயங்கிய
நானும்
குப்புற நின்று என்மேல் அவனை ஏறச் சொன்னேன்
என் கைவிரல் நசுக்கியே என் தோள் மேல்
ஏறி நின்றான்.
அவன் அழுத்தமும் பாரமும் தங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க
என் கைவிரல்களையும் என்னையும் குறை சொன்னான்.
என்னை சாட்டையால் அடித்து உயரப் பறக்கச் செய்தான்.
உயரப் பறக்கும் சிந்தனையில் என் வலிகளும் காயங்களும்
மறந்தே போயின.
அங்கே..
வானில் எனைப்போல் பலரையும் அவனைப்போல் சிலரையும் காணலுற்றேன்,
உயரப் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://thulaa.net/home/wp-content/uploads/2011/07/flying_bird_brushes_by_dollieflesh_stock.jpg"><img class="alignnone size-medium wp-image-323" title="flying_bird_brushes_by_dollieflesh_stock" src="http://thulaa.net/home/wp-content/uploads/2011/07/flying_bird_brushes_by_dollieflesh_stock-231x300.jpg" alt="" width="231" height="300" /></a></p>
<p>&nbsp;</p>
<p>முன் குறிப்பு…</p>
<p>என்மேல் எந்த தேசியச் சாயமோ, சாதியச் சாயமோ, மதச் சாயமோ பூசிவிடாதீர்,<br />
உலக அடிமைகளில் ஒருவனாக</p>
<p>நான்<br />
வெறுமனே,<br />
என்னையும் அவனையும் பற்றிய ஒரு கதை சொல்லப் போறேன்.</p>
<p>இங்கே நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமோ அல்ல,</p>
<p>நான் இல்லாத எல்லாமுமே அவன்….</p>
<p>*</p>
<p><span id="more-322"></span></p>
<p>முன்னொரு நாளில்<br />
நட்சத்திரக் கொடியுடன் வந்தான் ஒருவன்<br />
தான் முகிலை நோக்கி உயர ஏறத் துணை செய்ய வேண்டும்<br />
என்றான்.</p>
<p>எனைத் தன்னால் வானில் பறக்க வைக்க முடியும் என்றே<br />
பல கதைகள் சொன்னான்</p>
<p>அவன் மாய வார்த்தைகளில் மயங்கிய<br />
நானும்<br />
குப்புற நின்று என்மேல் அவனை ஏறச் சொன்னேன்<br />
என் கைவிரல் நசுக்கியே என் தோள் மேல்<br />
ஏறி நின்றான்.</p>
<p>அவன் அழுத்தமும் பாரமும் தங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க</p>
<p>என் கைவிரல்களையும் என்னையும் குறை சொன்னான்.<br />
என்னை சாட்டையால் அடித்து உயரப் பறக்கச் செய்தான்.</p>
<p>உயரப் பறக்கும் சிந்தனையில் என் வலிகளும் காயங்களும்<br />
மறந்தே போயின.</p>
<p>அங்கே..<br />
வானில் எனைப்போல் பலரையும் அவனைப்போல் சிலரையும் காணலுற்றேன்,</p>
<p>உயரப் பறந்த சிலரும் அவனும்<br />
ஏதோ பெயர் தெரியாத குளிர் நாட்டில் இறங்கி ஏதோ பெயரில்<br />
கூட்டம் போட்டார்கள்.</p>
<p>எனைப் பற்றி எனக்கு அறிவிக்காமலே ஏதேதோ தீர்மானம் எடுத்தார்கள்.</p>
<p>எனக்குத் தெரிந்து என்னிடம் இருக்கும் அடையாளங்கள் பலவும்<br />
அவனால் தீர்மானிக்கப்பட்டவை.</p>
<p>என்மேல் அவன் பறப்பது பற்றி என்னில் சிலர் பெருமையாக<br />
பீத்திக்கொள்கிறார்கள்.</p>
<p>அவனால் மட்டுமே என் கை விரல் காயங்களுக்கு மருந்து தர முடியும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்,<br />
என் விரல்களை நசுக்கியனும் அவனே என்பதை மறந்தே!</p>
<p>தனக்கு விரும்பிய நிறங்களில் என்னை மாற்றி விடுகிறான்,<br />
என் நிறம் பற்றியும் குற்றப்பத்திரிகை தயாரிக்கிறான்.<br />
தன் குப்பைகளை என்மேல் கொட்டி வேடிக்கை பார்க்கிறான்.<br />
அதற்கும் ஒரு அறிக்கை தயாரித்து அதிலும் என்னை குற்றம் காண்கிறான்.</p>
<p>என்மேல் அவன் ஏறிநிற்றலின் அழுத்தம் இன்னும் இன்னும்<br />
கூடிக்கொண்டே போக…<br />
வலி நிவாரணியாக சில போதை மருந்துகளை அவன் தலைமை தாங்கும்<br />
நிறுவனங்கள் ஆங்காங்கே வலிந்தே தந்தும் விடுகின்றன,</p>
<p>என் விடுதலை பற்றி யார் யாரிடமோ பேசியும் கதைத்தும் வருகிறான்.<br />
யாரிடம் இருந்து விடுதலை என்பது பற்றி மட்டும் அவன் பேசுவதேயில்லை.</p>
<p>அவனைச் சுமந்து பறந்து கொண்டிருக்கும் எனக்கு ஓய்வு தர அவன் நாட்டில்<br />
ஒரு பட்டமரம் தருவதாக என்னில் சிலரோடு பேசிக்கொள்கிறான்.</p>
<p>என் சுயம் என்ன என்பதை மறந்தே!</p>
<p>என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.</p>
<p>அடைவதற்கு ஏதோ இருப்பதாய் என்னில் சிலர் பேசிக்கொள்கிறார்கள்</p>
<p>எனக்கான முடிவுகள் அவனாலும் என்னில் சிலராலும் மட்டுமே எடுக்கப்படுகின்றன.<br />
நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமே அல்ல,</p>
<p>ஒன்றை மட்டும் அவன் மறந்தே போயிருக்கிறான் அவன் உயரப் பறப்பது என்னிலே ஏறியே !</p>
<p>என்றாவது ஒருநாள் அவன் நசுக்கிய விரல்களில் வழியும்<br />
என்</p>
<p>சிகப்பு ரத்தங்கள்</p>
<p>அவனை<br />
அவனுக்கு சொந்தமான<br />
வெள்ளை அறையில் அடைத்தே வைக்கும் காலம் வரும்</p>
<p>அன்று நான்</p>
<p>எவரதும் கை விரல்களையும் நசுக்காமலும்</p>
<p>எவருக்கும் ஏவலாளி ஆகாமலும்</p>
<p>ஒரு பறவையைப்போல்</p>
<p>உயர ஏறுவேன்.</p>
<p>உயர ஏறுவோம்…..</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>யுகன்</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/322/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கட்டுநாயக்க தொழிலாளர் போராட்டமும் பொலிசின் மிருகத்தனமான தாக்குதலும்</title>
		<link>http://thulaa.net/home/archives/318</link>
		<comments>http://thulaa.net/home/archives/318#comments</comments>
		<pubDate>Wed, 06 Jul 2011 10:07:18 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=318</guid>
		<description><![CDATA[மகிந்த சிந்தனை அரசாங்கம் தனியார் ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வர  அண்மையில் முயற்சி எடுத்திருந்தது. பொதுவாகத், தனியார் துறையினருக்குத் தகுந்த வழிகளில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கக் கூடியதாகும். அதனை அறுபத்தைந்து லட்சம் தனியார் துறை ஊழியர்களும் வரவேற்றிருப்பர். ஆனால், அரசாங்கம் உலக நாணய நிதியத்தின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் ஏற்கனவே தனியார் துறையினர் அனுபவித்து வரும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்யும் உட்கிடக்கையை உத்தேசச் சட்டமூலம் கொண்டிருந்தமை தொழிலாளர்கள், ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்குக் காரணமாயிற்று.

அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்த ஓய்வூதியச் சட்டத்தைச் சகல தனியார் துறைத் தொழிற்சங்கங்களும் எதிர்த்து நின்றதுடன் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களும் நடாத்தின. கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் இதற்கு எதிரான இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. இடதுசாரித் தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள், ஐ.தே. கட்சியின் தொழிற்சங்கங்கள் என எதிர்ப்பு பரந்து சென்றது.
அந்த வகையில் கட்டுநாயக்க சுதந்திர ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>மகிந்த சிந்தனை அரசாங்கம் தனியார் ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வர  அண்மையில் முயற்சி எடுத்திருந்தது. பொதுவாகத், தனியார் துறையினருக்குத் தகுந்த வழிகளில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கக் கூடியதாகும். அதனை அறுபத்தைந்து லட்சம் தனியார் துறை ஊழியர்களும் வரவேற்றிருப்பர். ஆனால், அரசாங்கம் உலக நாணய நிதியத்தின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் ஏற்கனவே தனியார் துறையினர் அனுபவித்து வரும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்யும் உட்கிடக்கையை உத்தேசச் சட்டமூலம் கொண்டிருந்தமை தொழிலாளர்கள், ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்குக் காரணமாயிற்று.</p>
<p><span id="more-318"></span></p>
<p>அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்த ஓய்வூதியச் சட்டத்தைச் சகல தனியார் துறைத் தொழிற்சங்கங்களும் எதிர்த்து நின்றதுடன் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களும் நடாத்தின. கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் இதற்கு எதிரான இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. இடதுசாரித் தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள், ஐ.தே. கட்சியின் தொழிற்சங்கங்கள் என எதிர்ப்பு பரந்து சென்றது.</p>
<p>அந்த வகையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் ஊழியர்களும் தொழிலாளர்களும் தமது எதிர்ப்பைக் காட்டினர். அவர்கள் மத்திக்கு விளக்கமளிக்கத் தொழில் அமைச்சர் சென்று நடாத்திய கூட்டத்தில் தொழிலாளர்;கள் சரமாரியான கேள்விகளைக் கேட்டனர். அமைச்சர் பதில் கூற முடியாது திணறினார்.</p>
<p>இந் நிலையில் மே மாதம் 24ம் திகதி, கொழும்பில் சகல தனியார்துறை தொழிற்சங்கங்களும் இணைந்து, தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். அதே நாளில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும்  தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். அவர்கள் மத்தியில் எழுந்த கோபாவேசம், சுதந்திர வர்த்த வலயத் தொழிலாளர்கள் மத்தியில் இதுவரை காலமும் எரிதணலாகக் கொதித்து நின்ற அடக்குமுறைகளுக்கு எதிரான உணர்வுகள் ஒன்று திரண்டு வெளிக் கிளம்புவது போன்று இருந்தது. அதற்குக் காரணம் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும் ஊழியர்களும் அதற்கு வெளியே உள்ள தொழிற்சங்க உரிமைகள், தொழிற் சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களாகவே வைக்கப்பட்டிருந்தனர். 1978ல் ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த அரசியலமைப்பின் ஊடாகவே சுதந்திர வர்த்தக வலயம் வரையறுக்கப்பட்டது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தொழிலாளர்களுக்கான சம்பளம் முதல் ஏனைய உரிமைகள் தனியே வகுக்கப்பட்டன. அவை யாவும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளதும் ஏனைய கம்பனிகளினதும் சுரண்டலுக்கு ஏற்றதாகவே வரையறை செய்யப்பட்டன.</p>
<p>தற்போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மொத்தம் ஐம்பதினாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் 36 ஆயிரம் பேர் பெண்கள், 14ஆயிரம் பேர் ஆண்கள். அவர்கள் அனைவரும் இளவயதினர் அல்லது நடுத்தர வயதுடையோராவர். அவர்களுக்குக் குறைந்தளவு சம்பளமே கிடைக்கிறது. அவர்களுக்குச் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன ஆறுதல் தருபவையாக இருந்து வந்துள்ளன. நிறைவேற்றப்பட இருந்த தனியார் ஓய்வூதியச் சட்டம் அவற்றை அடித்துச் சென்றுவிடும் அபாயத்தைக் கொண்டிருந்ததாலேயே சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>மே 24ல்  முதல் ஆர்ப்பாட்டம் நடந்தது. மே 30ல் இரண்டாவது ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களும் கூடி இருந்தனர். பொலீஸ், அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தாக்கி வன்முறையைத் தூண்டியது. அது மோதலாக மாறும் நிலை தணிந்திருந்த நேரத்தில் பொலிஸ் வேண்டுமென்றே தொழிலாளர் மீது தாக்குதலை மேற்கொண்டு தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்;து கண்ணீர் புகைப் பிரயோகம், தடியடி, துப்பாக்கிகளால் அடித்தல் என்பனவற்றுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தியது. அதில் 22 வயதான ரொஷான் சானக என்ற இயந்திர இயக்குனரான இளம் தொழிலாளி படுகாயப்பட்டு யூன் 1ம் திகதி உயிர் இழக்க நேர்ந்தது. இருநூற்றுக்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் காயங்கள், படுகாயங்கள் பட்டனர். அதே வேளை தமது வர்க்கப் போர்க்குணத்தை கல்லெறிந்து வெளிப்படுத்திய தொழிலாளர்களின் கல்வீச்சில் 40க்கு மேற்பட்ட பொலிசார் காயப்பட்டனர்.</p>
<p>இப் போராட்டத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 90 தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமது தொழிற் சங்கங்கள் மூலம் அணிதிரண்டே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத் தொழிற் சங்கங்கள் இணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஒரு கூட்டமைப்பாகவே இவ் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>தொழிலாளர்களது ஊழியர்களது எதிர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாத அரசாங்கம் இறந்த தொழிலாளியின் மரண ஊர்வலத்தால் தொழிலாளர்கள் மீண்டும் அணி திரள்வார்கள் என அஞ்சியது. எனவே, நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மரணச் சடங்கிற்குக் கட்டுப்பாடுகள் விதித்ததுடன், கட்டுநாயக்க பிரதேசத்தை ராணுவத்தால் நிரப்பியது. பாதுகாப்பின் பெயரால் எங்கும் ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. அது ஒரு வகையில் தொழிலாளர்களை அச்சுறுத்துவதாகவும் காணப்பட்டது. இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் மக்களும் மரணச் சடங்கிலும் மரண ஊர்வலத்திலும் பங்கு கொண்டனர்.</p>
<p>கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும், கொழும்பில் தொழிலாளர்கள் நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், பொலீஸ்-தொழிலாளர் மோதலும் அரசாங்கத்தைப் பணிய வைத்தன. ஓய்வூதியச் சட்டமூலத்தை ரத்துச் செய்ய வைத்தன. இந்த நிகழ்வு தொழிலாளி வர்க்கத்தின் பலத்தை வெளிக்காட்டிய வரலாற்றுச் சம்பவமாகியது. ஏற்கனவே இவ்வாறான தொழிலாளர் போராட்டங்களில் கந்தசாமி, சோமபாலா, முல்லோயாக் கோவிந்தன் போன்ற பல தமிழ், சிங்களத் தொழிலாளத் தியாகிகளது உயிர் அர்ப்பணிப்பே பல உரிமைகளுக்கு உரமாகியது. அவ்வாறான ஒரு நிலையே தற்போதும் காணப்படுகிறது. இவற்றுடன் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கோரமுகம் தெளிவாகவே எல்லோராலும் பார்க்க முடிந்;துள்ளது.</p>
<p>கடந்த காலத்தில் தேசிய இனப் பிரச்சினையைப் பயங்கரவாதமாகக் காட்டித் தெற்கில் தொழிலாளர் போராட்டங்களை முறியடித்து வந்த அரசாங்கம், இப்போது, ஆரவாரமாகத் தெற்கில் தொழிலாளர்களுக்கு எதிராக ஆயுதப் படைகளை நிறுத்திப் பொலீஸ் அடக்கு முறையை ஏவிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. இது புதியதோர் ஆரமப்ம் என்றே கொள்ள முடியும். இன ஒடுக்குமுறையை முன்னெடுத்து வந்த ஆளும் வர்க்கம் இப்போது வர்க்க ஒடுக்குமுறையை ஆயுதப் படைகளின் நேரடித் தலையீட்டின் மூலம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், இன மத பிரதேச வேறுபாடின்றி, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான அனைத்து மக்களும் ஐக்கியப்படுவது அவசியமாகும்.</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>புதியபூமி</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/318/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜே.வி.பி.யின் நிலைப்பாடும் செயற்பாடும்!</title>
		<link>http://thulaa.net/home/archives/313</link>
		<comments>http://thulaa.net/home/archives/313#comments</comments>
		<pubDate>Fri, 01 Jul 2011 18:02:14 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=313</guid>
		<description><![CDATA[ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இன்றைய அரசாங்கத்தை வழி நடாத்துவது மகிந்த சிந்தனை வேலைத் திட்டமாகும். இந்த மகிந்த சிந்தனைத் திட்டத்தை உருவாக்குவதிலும் 2004 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கும் ஜே.வி.பி. பிரதான பாத்திரம் வகித்து வந்தது. அதன் பின் ஜே.வி.பி இரண்டாக உடைந்து அதன் ஒரு பகுதியினர் விமல் வீரவன்சா தலைமையில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியையும் பெற்றனர். இருப்பினும் ஜே.வி.பி.யின் பிரதான தலைவர்களும், அமைப்புகளும் அதே பெயரில் இயக்கத்தை முன்னெடுத்தனர். தேர்தல்களில் படுதோல்விகளைச் சந்தித்தனர். மகிந்த ராஜபக்சவையும் அவரது அரசாங்கத்தையும் எதிர்த்த அதே வேளை, முன்னாள் ராணுவத்  தளபதியான சரத் பொன்சேகாவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் சந்தித்து அவற்றிலும் எதிர்பாராத கடும் தோல்விகளைக் கண்டனர்.

அதன் பின்பு அவர்களது எதிர்ப்பு அரசியல் படிப்படியாக முன்வர ஆரம்பித்தது. பாராளுமன்றப் பாதையிலான தேர்தல் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இன்றைய அரசாங்கத்தை வழி நடாத்துவது மகிந்த சிந்தனை வேலைத் திட்டமாகும். இந்த மகிந்த சிந்தனைத் திட்டத்தை உருவாக்குவதிலும் 2004 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கும் ஜே.வி.பி. பிரதான பாத்திரம் வகித்து வந்தது. அதன் பின் ஜே.வி.பி இரண்டாக உடைந்து அதன் ஒரு பகுதியினர் விமல் வீரவன்சா தலைமையில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியையும் பெற்றனர். இருப்பினும் ஜே.வி.பி.யின் பிரதான தலைவர்களும், அமைப்புகளும் அதே பெயரில் இயக்கத்தை முன்னெடுத்தனர். தேர்தல்களில் படுதோல்விகளைச் சந்தித்தனர். மகிந்த ராஜபக்சவையும் அவரது அரசாங்கத்தையும் எதிர்த்த அதே வேளை, முன்னாள் ராணுவத்  தளபதியான சரத் பொன்சேகாவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் சந்தித்து அவற்றிலும் எதிர்பாராத கடும் தோல்விகளைக் கண்டனர்.</p>
<p><span id="more-313"></span></p>
<p>அதன் பின்பு அவர்களது எதிர்ப்பு அரசியல் படிப்படியாக முன்வர ஆரம்பித்தது. பாராளுமன்றப் பாதையிலான தேர்தல் தோல்விகளை மீண்டும் வெற்றிகளாகத் தூக்கி நிறுத்துவதற்குத், தொழிலாளர்கள், மாணவர்கள், மக்கள் என்போரை மையப்படுத்திய பிரச்சினைகளைக் கையில் எடுக்க முன் வந்துள்ளனர். பாராளுமன்ற இடதுசாரிகளின் கையாலாகத்தனத்தால் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பு அரசியல் நடாத்தும் ஜே.வி.பி.யின் அணிகளில் இணைய வேண்டி ஏற்பட்டது. அதே போன்று மாணவர்கள்  ஜே.வி.பி.யுடன் கணிசமான அளவில் இருந்து வருகிறார்கள்.</p>
<p>இந் நிலையில் மகிந்த சிந்தனை அரசாங்கத்தைக் கடுமையாகக் கண்டித்து விமர்சிப்பதில் ஜே.வி.பி. முன்நின்று வருகிறது என்பது காணக் கூடியதாகும். இது எந்தளவிற்கு முன்செல்லும் என்பது பலத்த சந்தேகத்திற்குரியதாகும். காரணம் அவர்கள் முன்னெடுத்து வரும் அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது பிரதான போக்காக இருந்து வருகிறது. அவ்வப்போது மாக்சிசம் பற்றியும் செங்கொடி தாங்கிய இடதுசாரித்துவம் பற்றியும் அவர்கள் பேசிக் கொள்ளத் தவறுவதில்லை. அதனால் உலக நாடுகளின் சில பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜே.வி.பியைச் சகோதரக் கட்சியாகவும் கொண்டுள்ளன. சில கட்சிகள் இடையில் அவர்களுடனான தொடர்புகளைத் துண்டித்தும் கொண்டன.</p>
<p>எவ்வாறாயினும், தென்னிலங்கை அரசியலில் ஜே.வி.பி. குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக இருந்து வருவதை நிராகரிக்க முடியாது. அதன் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் சார்பான கோரிக்கைகள் அல்லது அவர்களை எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கையில் எடுத்து வீதியில் இறங்கி வருவதை எவ்வகையிலும் புறந்தள்ள முடியாது. ஆனால் அவற்றில் எவ்வளவிற்கு தூரநோக்கு அரசியல் நிலைப்பாடு அல்லது அவர்கள் கூறும் மாக்சிச நோக்கு நிலை உள்ளது என்பது கேள்விகளை எழுப்பக் கூடியவையாகும்.</p>
<p>அண்மைக் காலத்தில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் மலையக மக்களின் சம்பள உயர்வும் அடிப்படைப் பிரச்சினைகளும் பற்றியும் ஜே.வி.பி. உரத்துக் கூறி வருவதைக் கேட்க முடிகிறது. இவற்றில்  ஜே.வி.பி. ஏற்கனவே எடுத்து வந்த சந்தர்ப்பவாத பேரினவாத நிலைப்பாடுகள் பற்றி இதுவரை எவ்வித சுயவிமர்சனமும் அதன் அடிப்படையிலான கொள்கை மாற்றமும் செய்ததாக அறிய முடியவில்லை. தேசிய இனப் பிரச்சினை பற்றிய விடயத்தில் இனப் பிரச்சினை என்பது இலங்கையில் கிடையாது என்ற நிலைப்பாட்டையே முன்னெடுத்து வந்தது. அதனாலேயே அதிகாரப் பகிர்வு என்பது, பிரதேச சபை மட்டத்தில,; மிகத் தாழ்ந்ததாக இருப்பதையே வலியுறுத்தி வந்தது.</p>
<p>முன்பு மாகாண சபை முறைமை பதின்மூன்றாவது திருத்தமாகக் கொண்டு வரப்பட்டபோது ஜே.வி.பி. தனது கடும் எதிர்ப்பைக் கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் வடக்குக் கிழக்கு இணைப்பை உடைப்பதிலும்  முன்னின்றது. அத்துடன் யுத்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதிலும் யுத்தம் முiயாக நடாத்தப்பட வேண்டும் என்பதிலும் ஜே.வி.பி. முனைப்புக் காட்டி நின்றது.</p>
<p>இன்று போர்க் குற்றங்கள் பற்றிய ஐ.நா. நிபுணர் குழு முன் வைத்த விடயங்களை முழுமையாக எதிர்க்கவும் முடியாது ஆதரிக்கவும் இயலாது என்றவாறு அரசாங்கத்தைக் குறை கூறுவது போன்ற நிலையைத்தான் ஜே.வி.பி. கொண்டுள்ளது. அதே போன்று யுத்தத்தின் விளைவான மீள்குடியேற்றம், ஜனநாயக இயல்பு வாழ்வு மறுப்பு, தமிழ்ச் சிறைக் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் பற்றிய பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழ் மக்கள் சார்பாக ஜே.வி.பி. பேசிவருகிறது. இது ஒரு வகைத் தோற்றம் காட்டலா அல்லது கொள்கை மாற்றமா என்ற கேள்வியைத் தமிழ் மக்கள் மத்தியில் கேட்க முடிகிறது. இதனாலேயே ஜே.வி.பி.யிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் சில உள்ளன. தேசிய இனப் பிரச்சினை பற்றிய உங்கள தெளிவான நிலைப்பாடு என்ன? அதிகாரப் பகிர்வு பற்றிய உங்கள் கொள்கை என்ன? வடக்குக் கிழக்கில் அரசாங்கம் ராணுவம் முன்னின்று உருவாக்கி வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பற்றி என்ன கூறுகிறீர்கள்? ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தேசிய இனங்களுக்கான சுயாட்சி அமைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு யாது? வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில நீர் பறிப்புக்கள் இடம்பெறுவதை உங்கள் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்பது ஏன்? இவை யாவும் பேரினவாத நிலைப்பாடுகளின் வெளிப்பாடுகள் என்பதால் இவற்றில் உங்களது நிலை என்ன? இவற்றுக்குரிய பதில்களே உங்களின் அரசியல் நேர்மையைக் காண்பதற்குரிய அடிப்படைகளாகும்.</p>
<p>உலகிலும் இலங்கையிலும் தவறுகள் விடாத கட்சிகள் இயக்கங்கள் எதுவும் இருக்க முடியாது. ஆனால் நடைமுறை இயக்கப் போக்கினாலும் பட்டறிவுகளாலும் தவறுகள் அடையாளம் காணப்படும் போது அவற்றைத் திருத்திக் கொள்ளும் கட்சிகளே மக்கள் மத்தியில் நிலைத்திருக்க கூடியவையாகும். எனவே ஜே.வி.பி. தனது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டுள்ளதா? தனது கொள்கைகளை இலங்கையின் பல்லினத் தேசியங்களின் இருப்பின் யதார்த்தத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளதா? இவற்றுக்கு ஜே.வி.பி. உரிய பதில்களை வழங்குமாயின் மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், நம்பிக்கை கொள்ளலாம்.</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>புதியபூமி </strong></span></p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/313/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தொழிலாளரது உறுதியான போராட்ட நிலைப்பாட்டை எமது கட்சி ஆதரிக்கிறது &#8211; பு.ஜ.மா.லெ.க</title>
		<link>http://thulaa.net/home/archives/309</link>
		<comments>http://thulaa.net/home/archives/309#comments</comments>
		<pubDate>Sat, 04 Jun 2011 07:18:43 +0000</pubDate>
		<dc:creator>துலா</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://thulaa.net/home/?p=309</guid>
		<description><![CDATA[மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஒரு இளம் ஊழியர் கொல்லப்படவும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் காயங்கள், படுகாயங்கள் படவும் காரணமாக அமைந்த மிருகத்தனமான பொலீஸ் தாக்குதலை புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை தொழிலாளர்கள் ஊழியர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள தனியார் ஓய்வூதிய உத்தேச சட்ட மூலத்தை உடன் வாபஸ் வாங்க வேண்டும் எனவும் கட்சி வற்புறுத்துகின்றது.
மகிந்த சிந்தனை அரசாங்கம் எவ்வளவிற்கு தொழிலாளர் ஆதரவு அரசாங்கம் என வேடமிட்டுக் கொண்டாலும் அதற்கு பாராளுமன்ற இடதுசாரிகள் பதவிகளுக்காகப் பக்கவாத்தியங்கள் வாசித்தாலும் அதன் மக்கள் விரோத தொழிலாளர் விரோத அடக்கு முறை ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஒரு இளம் ஊழியர் கொல்லப்படவும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் காயங்கள், படுகாயங்கள் படவும் காரணமாக அமைந்த மிருகத்தனமான பொலீஸ் தாக்குதலை<strong> புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி</strong> மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை தொழிலாளர்கள் ஊழியர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள தனியார் ஓய்வூதிய உத்தேச சட்ட மூலத்தை உடன் வாபஸ் வாங்க வேண்டும் எனவும் கட்சி வற்புறுத்துகின்றது.</p>
<p>மகிந்த சிந்தனை அரசாங்கம் எவ்வளவிற்கு தொழிலாளர் ஆதரவு அரசாங்கம் என வேடமிட்டுக் கொண்டாலும் அதற்கு பாராளுமன்ற இடதுசாரிகள் பதவிகளுக்காகப் பக்கவாத்தியங்கள் வாசித்தாலும் அதன் மக்கள் விரோத தொழிலாளர் விரோத அடக்கு முறை ஆட்சி அதிகாரப் போக்கை மறைத்து விடமுடியாது என்பதையே கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான பொலீஸ் தாக்குதல் வெளிக் காட்டியுள்ளன.</p>
<p>இன்றைய ஜனாதிபதி அன்று தொழில் அமைச்சராக இருந்த வேளை நிறைவேற்ற முற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவுதானும் சாதகமானதாக இருந்த தொழிலாளர் சாசனம் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவப் பெரு நிறுவனங்களினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கடும் அழுத்தங்களால் கைவிடப்பட்டது. இன்று நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து வரும் ஜனாதிபதியால் அது பற்றி எதுவுமே பேச முடியவில்லை. அதே வேளை சர்வதேச நாணய நிதியத்தினது ஆலோசனையின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கும் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து அவர்களது சேமிப்பை கொள்ளையிடவும் வழி வகுக்கும் தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டுவர முன் நிற்பது அதன் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும் அந்நிய ஏகாதிபத்திய சார்பையும் தான் வெளிப்படுத்துகிறது.</p>
<p>பொருட்களின் மீதான விலை அதிகரிப்பையும், வாழ்க்கைச் செலவு உயர்வையும் திசை திருப்புவதற்கு அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பயங்கரவாதமாகக் காட்டியதுடன் வடக்கு கிழக்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையை சிங்கள் உழைக்கும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தியும் வந்தது. ஆனால் அதே ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும் ஆயுதப்படைகளைப் பயன்படுத்தியும் சிங்கள உழைக்கும் மக்களையும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் அப்பட்டமாகவே மறுத்து அடக்கும் போக்கு இன்று வெளிப்பாடடைந்து வேகம் பெற்று வருவதையே கட்டுநாயக்க தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.</p>
<p>கட்டுநாயக்க சுதந்திர வலைய ஊழியர்களும் ஏனைய தனியார் துறைத் தொழிலாளர்களும் காட்டிவரும் எதிர்ப்பையும் உறுதியான போராட்ட நிலைப்பாட்டையும் எமது கட்சி முழுமையாக ஆதரித்து நிற்கிறது.</p>
<p>எவ்வளவிற்கு பௌத்த தர்மம் பற்றிப் பேசினாலும் சிங்கள இனமொழி மேன்மை பற்றி எடுத்துரைத்தாலும் ஆளும் வர்க்க அரசாங்கங்கள் வர்க்க நிலையில் முதலாளித்துவ  அடிப்படையையும், ஏகாதிபத்திய அரவணைப்பையும் கொண்டதேயாகும் கொண்டதேயாகும். இதனை பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்கள் நடைமுறை அனுபவங்கள் மூலம் உணர்ந்து நாட்டின் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களோடும்  தொழிலாளர்களோடும் ஐக்கியப்பட்டு பரஸ்பரம் உரிமைகளை வென்றெடுக்க முன்வரல் வேண்டும் என்பது அவசியமானதாகும் .</p>
<p><span style="color: #ff0000;"><strong>&#8211;</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>2.06.2011</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>சி.கா. செந்திவேல்</strong></span><br />
<span style="color: #ff0000;"><strong>பொதுச் செயலாளர்</strong></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://thulaa.net/home/archives/309/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

