Articles Archive for March 2011
அரசியல், அறிக்கைகள் »
லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கேர்ணல் கடாபியின் மக்கள் விரோத, சர்வாதிகார அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தொடுத்திருக்கும் லிபியா மீதான போரை எவ்வ கையிலும் நியாயப்படுத்த முடியாது. இப்போர் நடவடிக் கைகளின் உள்நோக்கம் ஏகாதிபத்திய அக்கறையேயன்றி லிபிய மக்கள் நலன் சார்ந்ததல்ல. அதனால் லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் இந்தக் கண்டிப்பு எந்தவகையிலும் கேர்ணல் கடாபியின் எதேச்சதிகார ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதாகாது.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரபு நாடுகளில் இடம்பெற்று வரும் மக்கள் கிளர்ச்சிகள் பற்றியும் அதில் ஏகாதிபத்தியத்தின் தலையீடு பற்றியும் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழுவின் சார்பில் அதன் சர்வதேசஅமைப்பாளர் இ.தம்பையா விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அரபு …

