Home » Archive

Articles in the அரசியல் Category

அரசியல், ஒளிப்படங்கள், நிகழ்வுகள் »

[3 May 2012 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 51]
ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது. மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும்

இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப் போவதில்லை. அதே போன்று ஏகப்பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பொருளாதார அரசியல் விமோசனங்களும் கிடைக்கமாட்டாது. அதேவேளை ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்கள் மாறுவார்களே தவிர இன்றைய பேரினவாத தரகு முதலாளித்துவ ஆட்சி அமைப்பே நீடித்துச் செல்லும்.