Home » Archive

Articles in the செய்திகள் Category

அரசியல், அறிக்கைகள், ஈழம், செய்திகள் »

[3 Jan 2011 | 4 Comments | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 322]
ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து தமிழர்கள் உரிமைகளை பெறமுடியாது – சி. கா. செந்திவேல்

ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டு தமிழ் மக்கள் எந்த உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஏகாதிபத்தியத்துடன் கை கோர்த்து நின்ற தமிழ்த்தேசியவாதம் தான் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால்வரை கொண்டு சென்று பேரழிவுக்குள்ளாக்கியது.
இவ்வாறு ஏகாதிபத்திய உலகமயமாதலின் பாதிப்புகளுக்கு ஏதிராக விழிப்படைவோம் என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மக்கள் ஒத்துழைப்பு அமையம் 01.01.2011 அன்று யாழ் நகரில் நாடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு தினம் மற்றும் கியூபா விடுதலை தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய புதிய ஜனநாயக மாக்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் குறிப்பிட்டார்.