Articles in the இலக்கியம் Category
இலக்கியம் »
“காதல் தோல்வி”
காதல் என்று வந்து விட்டால், காதல் தோல்வி என்பது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் சாதாரண விடயம். மாத்தளை ராமு வேணியிடம் தோல்வியுற்றுக், காதல் காச்சலில் தவிக்கிறான். ஓழுங்காகச் சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை. கொஞ்சமாவது மனதைத் தேற்றிக் கொள்வதற்கு வீட்டின் பொது அறையில் உள்ள டேப் ரெக்கோடரில்
“… பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்… “
என்ற பாடல் வரிகளைத் திரும்பத் திரும்ப ரிவைன்ட் செய்து செய்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.

