Articles in the அறிக்கைகள் Category
அரசியல், அறிக்கைகள் »
ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்பு நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவமயப்படுத்தல் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. தீவிர பேரினவாத சக்திகளும் மதவாதிகளும் இவற்றில் முன் நிற்கின்றன. இவற்றுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆசிர்வாதமும் வழிகாட்டல்களும் உண்டு.
இத்தகைய நடவடிக்கைகள் இனப்பிளவுகளுக்கும் இனமோதல்களுக்கும் வழி வகுக்கின்றன. இதன் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கமும் இந்திய அமெரிக்க வல்லரசு சக்திகளுமே இலாபமடைந்து தத்தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்கின்றன. இந் நிலையில் தமிழ் மக்கள் தமது சொந்தத் தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்ளும் புதிய அரசியல் திசை மார்க்கத்தைக் கண்டறிந்து முன்னெடுக்க முன்வரல் வேண்டும். தோல்வியடைந்த கொள்கைகளையோ அல்லது ஆட்சி மாற்றம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியையோ அன்றி இந்தியா அமெரிக்கா என நம்பி நின்றோ தமிழ் மக்கள் எவற்றையும் பெறப்போவதில்லை. எனவே தெளிவான கொள்கையும் தொலை நோக்குடைய வெகுஜனப் போராட்டங்களும் யதார்த்தபூர்வமான …

