நெல்லியடியில் NDMLP போராட்டம் (படங்கள்)
கடந்த மாதம் 29ம் திகதி வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளில் ஒருவரான கணேசன் விமலரூபன் (வயது 30) அங்கு உயிரிழந்தார். விமலரூபன் கொல்லப்பட்டதையும் கைதிகள் தாக்கப்பட்டதையும் கண்டித்தும் அனைத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் நிலச்சுவீககரிப்பையும் ஆக்கிரமிப்பையும் நிறுத்தக் கோரியும் 18.07.2012 வடமராட்சி, நெல்லியடியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் புதிய-ஜனநாய மாக்சிய-லெனினிசக் கட்சி கலந்து கொண்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் உட்பட வடபிராந்திய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அதிகளவில் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் புதிய-ஜனநாயக மாக்சிய-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் உரையாற்றியதுடன் ஏனைய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் உரைநிகழ்த்தினர்.



















Leave your response!