[18 Oct 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 159]
கசகறணம் :வித்தியாசமான ஒரு நல்ல நாவல்

கசகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00

இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.
மிக முக்கியமாகக், …

Read the full story »

இலக்கியம் »

[18 Oct 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 159]
கசகறணம் :வித்தியாசமான ஒரு நல்ல நாவல்

கசகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00

இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.
மிக முக்கியமாகக், …

அரசியல், அறிக்கைகள் »

[6 Sep 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 175]
மர்ம மனிதன் பற்றிய உண்மைகளை மக்கள் NDMLP தோழர்களுக்கு எடுத்துக் கூறினர்

06.09.2011
மர்ம மனிதனின் நடமாட்டம் பற்றி மக்கள் மத்தியில் பேசப்படுவது கட்டுக்கதைகளோ வெறும் இட்டுக்கட்டுதல்களோ அல்ல. அல்லது சிலர் கூறுவது போன்று மக்களின் மனப் பிராந்தியோ, மாயையோ அல்ல. கடும் கறுப்பு நிறம் கொண்ட உருவ அமைப்பும் கோரமான முகமூடியும் கொண்ட தோற்றத்துடனேயே இம் மர்ம மனிதன் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கிக் கொள்கிறான். குறிப்பாகப் பெண்கள் மீது தாக்கியும் பயப்பீதி கொள்ள வைத்தும் இம் மர்ம மனிதன் அட்டகாசம் செய்து வருவதைப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அது பற்றி  அச்சம் பீதியுடன் விபரிக்கின்றனர். அதேவேளை இம் மர்மமனிதனைப் பிடிப்பதற்காகத் துரத்திச் செல்லும் மக்களை ராணுவத்தினர் அவ்வப் பகுதிகளில் தாக்கியும், வீடுகளைச் சேதப்படுத்தியுமுள்ளதை மக்கள் நேரடியாக எமக்குக் காட்டி மர்மமனிதனைப் பார்த்த கதைகளையும் எடுத்துரைத்தனர். அத்துடன் இம் மர்ம மனிதனை ராணுவத்தினர் பாதுகாத்து வருவதைத் தாம் …

அரசியல், அறிக்கைகள் »

[4 Sep 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 113]
மூவர் மரணதண்டனைக்கு எதிராகப் போராடும் சக்திகளுடன் எமது கட்சி இணைந்து நிற்கிறது  – NDMLP

ஊடக அறிக்கை – 02.09.2011
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த வெகுஜனப் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கநிலை வெற்றியாகும்.
உலகநாடுகளில் பெரும்பாலானவற்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பூரணமாக இரத்துச் செய்யப்பட்டோ இடைநிறுத்தப்பட்டோ இருக்கும் நிலையில் ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடெனப் பேசப்படும் இந்தியாவில் இந்த மூவர் மீது மட்டுமன்றி, முற்றாகவே மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடை செய்ய வேண்டும். இந்த மூவர் மீதான மரண தண்டனை நிறைவேற்றம் முழுமையாக இரத்துச் செய்யப்படுவதுடன், மரணதண்டனை நிறைவேற்றம் பூரணமாகவே சட்டப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மரண தண்டனைகளுக்காக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேல் நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் …

அரசியல், அறிக்கைகள், ஈழம் »

[24 Aug 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 88]
மக்கள் அணிதிரண்டு தம்மைத் தாமே தற்காக்கும் நடவடிக்கைகளை எமது கட்சி வரவேற்கின்றது – NDMLP

ஊடகங்களுக்கான அறிக்கை    21.08.2011
அண்மைய வாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள “கிறீஸ் பூதம்” என்னும் பெயரிலான மர்ம மனிதத் தாக்குதல் பேரினவாத ஒடுக்குமுறையின் மற்றொரு கோர வடிவமேயாகும். இது தற்செயலானதாகவோ அல்லது கீழ்மட்டத்திலிருந்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட உள்நோக்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகைய கிறீஸ் பூத மர்ம மனிதர்களால் மலையகத் தமிழ் மக்களும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்களுமே தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறார்கள். இதனால் அச்சம் பீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட அலுவல்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாதுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் கடும் பாதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளும் அதிகாரத் தரப்பில் இருந்து இது பற்றி அக்கறைப்படுவதாகவோ அல்லது அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவோ இல்லை. அதனால் இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் அதிகாரபீடத்தின் ஆசீர்வாதத்துடன் …

அரசியல் »

[6 Jul 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 134]
கட்டுநாயக்க தொழிலாளர் போராட்டமும் பொலிசின் மிருகத்தனமான தாக்குதலும்

மகிந்த சிந்தனை அரசாங்கம் தனியார் ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வர  அண்மையில் முயற்சி எடுத்திருந்தது. பொதுவாகத், தனியார் துறையினருக்குத் தகுந்த வழிகளில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கக் கூடியதாகும். அதனை அறுபத்தைந்து லட்சம் தனியார் துறை ஊழியர்களும் வரவேற்றிருப்பர். ஆனால், அரசாங்கம் உலக நாணய நிதியத்தின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் ஏற்கனவே தனியார் துறையினர் அனுபவித்து வரும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்யும் உட்கிடக்கையை உத்தேசச் சட்டமூலம் கொண்டிருந்தமை தொழிலாளர்கள், ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்குக் காரணமாயிற்று.